Ad Widget

வெள்ளைக் கொடியுடன் அத்துமீறி செல்வோம் உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் எச்சரிக்கை

”சித்­திரைப் புத்தாண்டுக்குள் எம்மை எமது சொந்த இடங்களில் மீள்­கு­டி­யேற்றம் செய்­யா­விடின், வெள்ளைக் கொடிகளுடன் எமது பகுதிக்குள் அத்­து­மீறி பிரவேசிப்போம்” என வலி.­வ­டக்கில் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட வேண்­டிய மக்கள் சூளு­ரைத்­துள்­ளனர்.

வலி.வடக்கு நலன்­புரி நிலைய பொது நிர்­வாக அமைப்­பி­னரின் ஏற்­பாட்டில்இ யாழ். சபா­ப­தி­பிள்ளை மற்றும் கண்­ணகி நலன்­புரி நிலை­யங்­களில் வாழும் மக்கள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை மீள்­கு­டி­யேற்­றத்­தினை வலி­யு­றுத்தி அடை­யாள உண்­ணா­வி­ரத போராட்­டத்­தினை முன்­னெ­டுத்தனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற மக்களே மேற்கண்டவாறு தெரி வித்தனர்.

நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை மீள்­கு­டி­யேற்­றத்­தினை வலி­யு­றுத்தி அடை­யாள உண்­ணா­வி­ரதம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

உண்­ணா­வி­ரத­ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 3 அம்ச கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ளனர்.

பலாலி விமான நிலையத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக விஸ்­த­ரிப்புச் செய்ய வேண்டாம், எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­திற்குள் விரைவில் வலி.வடக்கு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் நலன்­புரி நிலைய மக்­க­ளுக்­கான வாழ்­வா­தா­ரங்­களை வழங்­குதல் உள்ளிட்ட கோரிக்­கை­களை பாதிக்கப்பட்ட மக்கள் முன்­வைத்­துள்­ளனர்.

இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 6 மாதத்­திற்குள் வலி­வ­டக்கில் மீள்­கு­டி­யேற்றம் செய்து. வலி­வ­டக்கு மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு தருவேன் என கூறினார்.

ஆனால், பலாலி விமான நிலை­யத்­தினை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக புன­ர­மைப்புச் செய்­வ­தற்கு வலி­வ­டக்கு மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­மென்றும், அதை யார் எதிர்த்­தாலும், பலாலி விமான நிலையம் விஸ்­த­ரிப்புச் செய்­யப்­ப­டு­மென்று பாது­காப்பு செயலாளர் மற்றும் புனர்­வாழ்வு அமைச்­சரின் கருத்­துக்கள் எம்மை அதிர்ச்­சி­ய­டைய வைத்துள்ளன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 6 மாத காலத்­திற்குள் எம்மை தமது சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்றம் செய்வார் என நாம்­பிக்­கை­யுடன் இருந்தோம்.

ஆனால், பலாலி விமான நிலை­யத்­தினை விஸ்­த­ரிப்புச் செய்வோம் என கூறி­யதன் பின்னர் ஜனா­தி­ப­தியின் வார்த்­தையில் நம்­பிக்கை இழந்­து­விட்டோம்.

அத்­தி­யாவ­சிய பிரச்­சி­னை­க­ளான மல­சல கூடங்களை பாவிப்­பதில் பிரச்­சினை, தண்ணீர் பிரச்­சினை உட்­பட இளம் பெண்­க­ளுக்கு திரு­மணம் செய்­வதில் பிரச்­சினை, சமூக கலாசார பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கும் எம்மை உட­ன­டி­யாக மீள்­கு­டி­யேற்றம் செய்ய வேண்­டு­ம். எமது சொந்த இடத்­திற்கு சென்று தாங்கள் ஏதா­வது ஒரு தொழிலை செய்து நிம்­ம­தி­யான வாழ்க்கை வாழ்வோம்.

உங்கள் பிள்­ளை­களை போன்று எங்கள் மீதும் கருணை கொண்டு, உட­ன­டி­யாக மீள்­கு­டி­யேற்றம் செய்ய வேண்டும் தமிழ் அர­சியல் கட்­சி­களின் மந்­த­போக்கே எமது மீள்­கு­டி­யேற்ற தாம­தத்­திற்கு காரணமகும்.

எனவே, சுமார் 26 வரு­டங்­க­ளுக்கு மேலாக பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரும் எம்மை ஜனா­தி­பதி கருணை கொண்டு, எமது சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யேற்றம் செய்ய வேண்­டு­ம். அவ்­வாறு எதிர்­வரும் ஏப்ரல் மாதம் புது­வ­ரு­டத்­திற்கு முன்னர் மீள்­கு­டி­யேற்றம் செய்யத் தவறின் எம்மை அழித்­தாலும் பர­வா­யில்லை வெள்ளைக் கொடி­யினை பிடித்­துக்­கொண்டுஇ உயர்­பா­து­காப்பு வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து எமது சொந்த இடங்களில் நாமே மீள்குடியேறுவோம்.

1990 ஆம் ஆண்டு சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து சொல்லென்னாத் துன்ப துயரங்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டவர்களாகவே இருக்கின்றோம். எம்மைத் தேடிவரும் பலரும் பல வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அத்துடன் நல்லிணக்க அரசாங்கத்தினாலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் எதுவும் நடக்கவில்லை. இன்றுவரை நாம் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றோம்.

ஏப்ரல் மாதத்திற்கு முன் மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும். இல்லையேல் எமது குடும்ப அட்டைகளை பிரசேத செயலங்களில் ஒப்படைத்து விட்டு வெள்ளைக்கொடி ஏந்தி எமது சொந்த இடங்களுக்குச் செல்வோம் என்றனர்.

இதேவேளை நேற்றையதினம் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 32 நலன்புரி நிலைய மக்கள் கலந்து கொண்டதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன்இ வடக்குமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன்இ வலி.வடக்கு பிரதேச முன்னாள் உபதவிசாளர் ச.சஜீவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தம்மை மீள்குடியேற்றம் செய்யும் வரை வலி.வடக்கு மக்கள் வாழும் நலன்புரி நிலையங்களில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை சுழற்சி முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts