- Tuesday
- June 16th, 2026
அரசியல் தீர்வானது தமிழ் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையிலான ஒரு சமஸ்டித்தீர்வு அமைய வேண்டும், அந்த இலக்கை நோக்கி எமது அரசியல் செயற்திட்டங்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ளது. கட்சியின் வருடாந்த தேசிய மாநாட்டு பிரகடனம் நேற்று வௌியிடப்பட்டது. குறித்த பிரகடனத்திலேயே மேற்கண்ட விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது....
என்னை எந்த நேரத்திலும் சந்திக்கலாம், எனது வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்து உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை தந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 2017ம் ஆண்டு...
தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் மிகவும் நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களது நல்லாட்சியிலும் தமிழ் மக்கள் பெற்றிருக்கும் நன்மைகள் மிகவும் குறைவு என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ‘ஐனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் இன்று ஜனாதிபதியினால்...
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை காலை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் இணைந்துகொண்டனர். மட்டக்களப்பு நகரில் உள்ள வெள்ளைப்பாலத்தில் இருந்து காந்திபூங்கா வரையில் இந்த மனித சங்கிலி அமைக்கப்பட்டு...
ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை முன்னிட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடபகுதியில் கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கத்தினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும்...
"இலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய அரசியல் ஆளுமையை இன்றைய தமிழ் தலைமைகள் கொண்டிருக்கின்றன எனவும் அதற்கெதிராக அவ்வாறு இல்லை எனவும் சொல்லாடல் களம் அமைந்திருந்தது. அரங்கு நிறைந்த கூட்டம். வெற்று வார்த்தை ஜாலத்துக்காக அல்ல, இருப்பதற்கு இருக்கைகள் இன்றி நின்றபடி பலரும் விவாத சமரினை மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தனர். இப்படி...
யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் ‘அரச தலைவரிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற குறித்த திறப்பு விழாவில், அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
சர்வதேச பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளுடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதங்கள் உள்ளிட்ட சில விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை குறித்த அறிக்கை, ஏற்றுக்கொண்டிருந்தாலும், பல முக்கியமான விவகாரங்களில் அரசாங்கம் முன்னேற்றங்களை எட்டத் தவறியுள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது....
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து வழங்குமாறு கோரி ஈழ தமிழர்கள் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஈழ அகதிகளின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாக சர்வதேச அகதிகள் நிறுவன அதிகாரிகள் வழங்கிய உத்தரவாதத்தினை தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழ அகதிகள் தம்மை வேறு...
வடபகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் வேளை கன மழை பெய்துள்ளது. ஒரு சில மணித்தியாலயங்கள் பெய்த கன மழை காரணமாக வீதிகள் வெள்ள நீர் நிரம்பி வழிந்தது. தற்போது கால போக நெல் அறுவடை முழுமையாக நிறைவுப் பெறாத நிலையில், மழை பெய்துவருவது விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. அறுவடை செய்த நெல்லை உலர வைக்க...
கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி, கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்படட நிலையில், நேற்று கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக வாயில் முன்பாகவும்...
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இம்முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பெருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாட்டு கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுவெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பக்தர்கள் வருகைதரவுள்ள நிலையில்,...
கிளிநொச்சி, சாந்தபுரம், 8ஆம் வீதி பகுதியில் ராணுவ வீரர் என சந்தேகிக்கப்படும் நபரொருவரால் பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 56 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சாந்தபுரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குறித்த பெண்ணை,...
கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசித்ரா எதுவும் வாய் திறக்காத நிலையில், அவரது கணவர் கார்த்திக், சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை யாரோ சிலர் முடக்கிவிட்டதாகவும், அவர்கள்தான் தகாத பதிவுகளை வெளியிட்டதாகவும், தற்போது சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்றுவிட்டதாகவும் விளக்கம்...
பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன் நடித்த அதிரடி திரைப்படமான `தம்பி' வெளியானது. அதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான் விடுதலை சிறுத்தைகள்...
சம்பள முரண்பாட்டை அடிப்படையாக வைத்து இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை செயப்படுத்துவதில்லையென இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் அறிவித்தல் விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பிலான ஆலோசனை வழங்கியதாக நல்லிணக்கம் தொடர்பான அமைச்சின் செயலாளர் மனோ தித்தவெல்ல நேற்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிவிப்புச் செய்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்காது என மனித...
கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்க கோரி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (சனிக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கிறது. தமது பூர்வீக கிராமத்தில் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள 150இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை விடுவிக்க கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கேப்பாப்பிலவு பூர்வீக கிராமம் முழுவதும், ராணுவத்திற்காக சுவீகரிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணிகள் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததற்கு அமைய, தற்போது முதல் கட்டமாக ஏழரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி மக்கள் தங்கள் சொந்த காணிகளுக்குள் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற...
வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 111 ஆவது வருடாந்த கிறிக்கற் போட்டியானது இம் மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
வடக்கின் போர் எனப்படும் யாழ்ப்பாணத்தின் பழமையான இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிறிக்கற் போட்டியானது 1904ஆம் ஆண்டு முதன் முதலில் நடைபெற்றது. அன்றிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த...
Loading posts...
All posts loaded
No more posts
