சம்பள முரண்பாட்டை அடிப்படையாக வைத்து இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.