விமல் வீரவன்சவிற்கு பிணை

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விமல் வீரவன்சவிற்கு பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சரீரப் பிணைக்காக குடும்ப உறவினர் ஒருவர் முன்னிலையாக...

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் குற்றவாளிக்கு, மரண தண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நெடுந்தீவு சிறுமி குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பின் பிரகாரம், பாலியல் குற்றசாட்டில் ஈடுபட்டமைக்காக...
Ad Widget

விக்ரமுக்கு ஜோடியான ஸ்ரீப்ரியங்கா

வாலு படத்தின் இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இப்போது இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடிக்க இருக்கிறார். 'கங்காரு', 'வந்தாமல', 'நிலா மீது காதல்', 'அகடம்', உட்பட பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீப்ரியங்காவுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, வெறுத்துப்போன அவர், தன் சொந்த...

மகனை நடிக்க வைக்க மறுத்த ஹீரோ

சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் பாஸ்கர் தி ராஸ்கல். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீ-மேக் பண்ண இருப்பதாகவும், அவற்றை தானே இயக்கவிருப்பதாக கூறி வந்தார் இயக்குநர் சித்திக். தமிழ் ரீமேக்கில் மம்முட்டி வேடத்தில் ரஜினி நடிப்பதாக எல்லாம் சொல்லப்பட்டு, தற்போது அரவிந்த்சாமி நடிக்க...

விஜய் நடிக்கவிருந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்

பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான், இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன் நடித்த `வாழ்த்துக்கள்' திரைப்படம் வெளியானது. கடந்த 2013-ல் `நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்....

மனச்சாட்சிக்கு தெரிந்து குற்றத்தை செய்யவில்லை: நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி வாக்குமூலம்

என் மனசாட்சிக்கு தெரிந்து நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சி கூண்டில் நின்று வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால்...

மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே காணிகள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

சிறுபான்மை மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே வடமாகாணத்தின் எல்லைப் பகுதியிலுள்ள காணிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு கோரி வடமாகாண சபையில் நேற்று (வியாழக்கிழமை) பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு...

சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்

திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி, அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. இந் நிலையில், ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும்...

முள்ளிக்குளத்தை யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக மாற்றியது கடற்படை!

யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் மறைமாவட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு

மாலபே தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பிற்கு நுாற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...

2017 முன்னணி கிரிக்கட் வீரராக விராட் கோலி

2017ம் ஆண்டில் முன்னணி கிரிக்கட் வீரராக விராட் கோலியை கிரிக்கட் உலகின் விவிலியம் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை தெரிவுசெய்துள்ளது. விஸ்டன் சஞ்சிகையின் இந்த வாரத்திற்குரிய பதிப்பில் விராட் கோலி பற்றிய ஆசிரியர் தலையங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கூடுதலான கனவுகளை நனவாக்கியவர் விராட் கோலி என்று பத்திரிகை ஆசிரியர் லோறன்ஸ் பூத் குறிப்பிட்டுள்ளார். ரெஸ்ட்...

போர்க் குற்றம் இல்லை எனில் அவகாசம் கோரியது ஏன்?

இலங்கையில் இடம்பெற்ற போரின்போது, போர்க் குற்றம் இடம்பெறவில்லை என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தைக் கோரியது ஏன் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தத்தின் போது யார் குற்றமிழைத்தாலும், அது மனித குலத்துக்கு எதிரான குற்றமே. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட...

இலங்கை அகதிமீது ஜேர்மனியில் தாக்குதல்

ஜேர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள 22 வயதான இலங்கை அகதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, ஜேர்மனிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தனது வசிப்பிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த குறித்த நபர் மீது, மூன்று பேரினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பஸ் தரிப்பிடமொன்றுக்கு அருகில் இடம்பெற்ற இத்தாக்குதலில், இலங்கைப் பிரஜையொருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும்...

வெளியில் வந்தவுடன் வெட்டுவேன்! : ஊடகவியலாளர்களை மிரட்டி கொலை சந்தேக நபர்!!

நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர், யாழ். மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம், நேற்று (06) இடம்பெற்றுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம்...

பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு ஓடிய கான்ஸ்டபில் வசமாக சிக்கினார்

கொழும்பு - விஹாரமஹாதேவி பூங்காவில் பெண் ஒருவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த தங்கச் சங்கிலி 85,000 ரூபா பெறுமதியானது எனத் தெரியவந்துள்ளது. இதனை கொள்ளையிட்டு தப்பி ஓடிய வேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் பூங்கா பாதுகாவலர்கள் உள்ளிட்ட குழுவினர், சந்தேகநபரை மடக்கிப்...

பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக 34 ஓட்டங்களுக்கு 03...

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் பலி

வள்ளத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சுந்தரலிங்கம் கிருஸ்ணராசா (வயது 34) என்ற குடும்பஸ்தர் நீரிழ் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். காரைநகர் - ஊரி கடற்கரையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான இவர் வியாழக்கிழமை அதிகாலை 5.30 அளவில் ஊரி கடலிற்கு வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்தநிலையில், 10.00 மணி ஆகியும் அவர்...

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள்: பின்னணியில் படையினரா?

யாழில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவற்றை கடத்துவது யாரென்ற விடயம் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதானது படையினர் மீதே சநதேகத்தை ஏற்படுத்துகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே சிறிதரன் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் இன்று ஒன்றரை இலட்சம் வரையான படையினர்...

தமிழ் மக்களை உதாசீனப்படுத்தினால் அரசாங்கத்திற்கு தக்க பதிலடி கிடைக்கும்: சுரேஷ்

தமிழ் மக்களை தொடர்ந்தும் துன்புறுத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசாங்கம் இருக்குமேயானால், அதற்கான பதிலை மக்கள் வழங்குவார்கள் என்றும் அது அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டம் தொடர்பாக யாழில் ஊடகங்களுக்கு கருத்துத்...

விவேகம் என பெயர் வைக்கப்பட்டது ஏன்?

வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, அஜித்தை வைத்து மூன்றாவது முறையாக இயக்கும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அஜித்தின் சிக்ஸ் பேக்கை பார்த்து அவருடைய ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து விவேகம் படத்தில் அஜித்தின் கெட்டப்பை வெளிப்படுத்துவது போல் புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் விவேகம் படம் பற்றி தொடர்ந்து...
Loading posts...

All posts loaded

No more posts