Ad Widget

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் குற்றவாளிக்கு, மரண தண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நெடுந்தீவு சிறுமி குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தீர்ப்பின் பிரகாரம், பாலியல் குற்றசாட்டில் ஈடுபட்டமைக்காக குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் தண்டபணமும், சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட கடூழிய சிறைதண்டனையும், நஷ்ட ஈட்டை செலுத்த தவறின் மேலதிகமாக மேலும் ஐந்து வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Related Posts