யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி குடும்பஸ்தர் உயிரிழப்பு

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர், நேற்று (11) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக, தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை தேவராஜா (வயது 58) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு, கடந்த 05ஆம் திகதி குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது....

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகமாநாடு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடாக மாநாடு நேற்று பி.ப 1.00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்
Ad Widget

மலையக மக்களை இழிவுப்படுத்தியதால் நிறுத்தப்பட்டது கரை எழில் நூல் விநியோகம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில் கரை எழில் எனும் நூலும் வெளியிடப்பட்டு வருவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஆக்கங்களுடன் வெளியிடப்படுகின்ற கரை எழில் நூலில் கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் தமிழ்க்கவி என்பவரின் கட்டுரையும் வெளிவந்துள்ளது. குறித்த கட்டுரையில் எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் மலையக தமிழர்களை...

யாழில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்!

யாழ்.மாவட்டத்தின் வெப்பநிலை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் 36 பாகை முதல் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ்.வானிலை அவதான நிலைய பொறப்பதிகாரி ரி.பிரதிபன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மாலை 2 மணிக்கு பின்னரான நேரங்களில் ஒடுங்கல் மழைக்கான சாத்தியம் உள்ளதாகவம் அவர் கூறினார். இலங்கையின் மத்தியில் உச்சம் கொடுக்கும் சூரியன் படிப்படியாக...

2.ஓ படத்தில் இரண்டே பாடல்கள்!

சமீபகாலமாக இரண்டு மணி நேரத்தைத் தாண்டும் படங்களை ரசிகர்கள் அவ்வளவாக ரசிப்பதில்லை. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக சொல்வதையே ரசிக்கிறார்கள். அதேபோல் பாடல்களையும் அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒன்றிரண்டு பாடல்களோடு நிறுத்திக்கொள்கிறார்கள் சினிமாக்காரர்களும். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் 2.ஓ படத்தில் இரண்டே பாடல்கள்தானாம். ரஜினியின் படங்களில் ஓப்பனிங் பாடல்கள் இருக்கும்....

விஜய், முருகதாஸ் படத்துக்கு மூன்று ஹீரோயின்கள்?

விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் என்று மூன்று ஜோடிகள். விஜய் அடுத்து நடிக்கவிருப்பது ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில். ஏஆர்.முருகதாஸ் - விஜய் இணைகிறார்கள் என்பது மட்டும் தான் உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது....

விஜய் பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்

விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் சத்யராஜின் மகளான அனுயா பிரசவ வலியால் துடிக்க, அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில், கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே இருந்துகொண்டு, அங்கிருந்து வெப் கேமரா மூலம் மருத்துவரின் ஆலோசனை பெற்று அந்த குழந்தையையும், அம்மாவையும் காப்பாற்றுவார்கள். இந்த காட்சி போன்று தற்போது உண்மையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது....

மதுப்பாவனையைக் குறைத்துள்ள நல்லாட்சி: ஜனாதிபதி பெருமிதம்

நாட்டின் எதிர்கால சந்ததியினரை மதுப் பயன்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினது ‘போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாடு’ எனும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத் தந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) கண்டி தெல்தெனியவில் மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து...

எமது போராட்டத்திற்கு வலுசேர்க்க மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளனர்: கேப்பாப்பிலவு மக்கள்

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளதாக கேப்பாப்பிலவு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமது போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்கு பதவிகளை துறந்து போராட வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ள போதிலும், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தமது...

ஆவா குழு உறுப்பினர்கள் ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி அல்லாரை, மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலலேயே இந்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் உட்பட்டவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன்...

புலம்பெயர் தமிழர் ஒருவரால் சுன்னாக மக்கள் அதிருப்தியில்!

சுவிற்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் ஒருவர் தனது காணியை சுன்னாகம் காவல்துறையினருக்கு விற்பனை செய்வதற்கு முன்வந்துள்ளார். உடுவில், சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த புலம் பெயர்ந்த தமிழரே காவல்துறையினருக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளார். குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள குறித்த காணியை, குடியிருப்பாளர்கள் அந்தக் காணியைக் கோரியுள்ளபோதிலும், அதற்கு காணி உரிமையாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார். அத்துடன்...

யாழில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிகரித்த வெப்பநிலை காரணமாக உள்ளூர் மரக்கறிகளின் உற்பத்தி குறைவடைந்து வருவதால், யாழ்ப்பாணத்துச் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றன என்று, சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் மிகவும் மலிந்த நிலையில் காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள், இந்த வாரத்தில் மூன்று, நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளன. முன்னர் 40 ரூபாய்க்கு...

பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு: முறையிட்டால் நடவடிக்கை

“இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ அல்லது என்னிடமோ, பாதிக்கப்பட்ட பெண்ணினால் முறைப்பாடு செய்யப்படுமாயின், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்தார். சிறிதரன் எம்.பியின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகி வேழன் என்றழைக்கப்படும் அருணாச்சலம்...

மீள்குடியேற்றம் விரைவில் இடம்பெறும் : புதிய கட்டளைத்தளபதி

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி நேற்று (11) மாலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை அவருடைய இல்லத்தில் வைத்து சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பதவி உயர்வு பெற்று சென்றதை தொடர்ந்து புதிய கட்டளை...

முல்லைத்தீவிலிருந்து சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்

முல்லைத்தீவு - நாயாறு களப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்த 23 சிங்கள மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களால் அடாத்தாக அமைக்கப்பட்டிருந்த 8 வாடிகளில் 6 வாடிகள் அகற்றப்பட்டும் உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளரினால் கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி நாயாறு...

மருதங்கேணி கடல்நீர் ஊடாக நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும்!

மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ். மாவட்டத்தின் நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும் என வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இரணைமடு நீர் வராது எனக் குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இரணைமடு - யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? என சம காலத்தில்...

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படுவாரா இலங்கை பிரஜை?

கனடாவில் வாழும் ஸ்ரீலங்கா பிரஜையை நாடு கடத்துவதற்கான உத்தரவை அந்த நாட்டு குடிவரவு மற்றும் அகதிகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த நபர் தனது மனைவியை கொலை செய்தமை தொடர்பிலான குற்றம் சாட்டப்பட்டமையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற ஸ்ரீலங்கா பிரஜையே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த...

தனுஷுக்கு ரஜினி அறிவுரை!

அடுத்தடுத்து படம் இயக்காதீங்க மாப்பிள்ளை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷிடம் கூறியுள்ளாராம். நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகராக இருந்து வரும் தனுஷ் பவர் பாண்டி சாரி ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். தனது அப்பாவின் முதல் பட ஹீரோவான ராஜ் கிரணையே தனது முதல் ஹீரோவாக ஆக்கியுள்ளார். படத்தில் ஸ்டண்ட்...

திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களுக்குள் ஊடகங்கள் விமர்சனங்களை வெளியிடக்கூடாது: விஷால் அதிரடி

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெருப்புடா’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள சிவாஜியின் ‘அன்னை இல்லத்தில்’ நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர்கள் விவேக், விஷால், பிரபு, சத்யராஜ், தனுஷ், ராகவா லாரன்ஸ், கார்த்தி, விஜய்யின் மனைவி சங்கீதா, நிக்கி கல்ராணி, இயக்குனர் விக்ரமன்...

எனக்கும் இயைராஜாவுக்கும் இடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

அமெரிக்காவில் இசைக்கச்சேரியில் பிசியாக இருக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயைராஜாவுடனான காப்புரிமை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். காப்புரிமை பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்பது நாம்...
Loading posts...

All posts loaded

No more posts