கிளிநொச்சியில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு!! பொதுமக்கள், பொது அமைப்புகளுக்கு அவசரவேண்டுகோள்!!

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர். தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி...

ஜேர்மனியிலும் ஆவா குழு! : முதலமைச்சர் சி.வி

ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆவா குழு தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது, அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பாக இன்டபோலுக்கு தகவல் தெரிவிக்கவுள்ளதாகவும்...
Ad Widget

எம்மீது நம்பிக்கை வையுங்கள்; உபுல் தரங்க விடுக்கும் வேண்டுகோள்

இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளார். சில விடயங்களை வௌிப்படையாக பேச முடியாது என்ற போதிலும் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். அனைத்து அணிகளும் பின்னடைவை சந்திப்பதாகவும், டெஸ்ட், ஒருநாள் மற்றும்...

சீனிக்கான விசேட இறக்குமதி வரி 8 ரூபாவினால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்காக அறவிடப்படும் விசேட இறக்குமதி வரி 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட இறக்குமதி வரி இன்று நள்ளிரவு (16) முதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளதை அடுத்து,சந்தையில் ஒரு கிலோ சீனியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. சீனிக்கான...

லட்சக்கணக்கானோர் புடைசூழ மடு அன்னைக்கு திருவிழா

மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழா திருப்பலி, நேற்று (செவ்வாய்க்கிழமை) 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர்...

கண்டாவளை பகுதி காணிகளை விடுவித்தது ராணுவம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு தொகுதி, நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டது. கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள 38 ஏக்கர் தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன. காணிகளை விடுவித்தமைக்கான ஆவணங்களை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம், ராணுவத்தினர் கைளித்துள்ளனர். இக் காணிகள் உரிய முறையில் இனங்காணப்பட்டு, காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு...

அமைச்சுப் பதவி பறிக்கப்படும் என்ற அச்சம் எனக்கும் உள்ளது: அனந்தி சசிதரன்

அமைச்சராக பொறுப்பெடுத்துள்ள நிலையில் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுத்து வருவதுடன், வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியும் எப்போது பறிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளதாக வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள், புனர்வாழ்வு மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து...

உள்ளக கணக்காய்வாளர் நியமனங்கள் ஆளுநரால் வழங்கி வைப்பு!

வடக்கு மாகாண உள்ளக கணக்காய்வாளர்களுக்கான நியமனங்களை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே நேற்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைத்துள்ளார். வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவாகிய 13 பேருக்கான நியமனக் கடிதங்களையே ஆளுநர் தனது செயலகத்தில் வைத்துக் கையளித்தார். சம்பிரதாயபூர்வமாக நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் பத்திநாதன்,...

வடக்கில் வன்முறைகளுக்கு மொழிப்பிரச்சினையே காரணம்: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதான காரணம் மொழிப்பிரச்சினையே என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்றயதினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைக் காலங்களில்...

தமிழ்மக்கள் பொறுமை இழந்துவிட்டனர்: இரா. சம்பந்தன்

காணி விவகாரத்தில் தமிழ்மக்கள் பொறுமை இழந்துவிட்டனர் எனவே சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்திற்கு சாதகமான சமிக்ஞை அல்ல என்றும்...

மணற்காட்டு படுகொலைச் சம்பவம்: பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

மணற்காட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மணற்காட்டுப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி மணலேற்றிச் சென்ற லொறியின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த யோகராசா தினேஸ் என்பவர் உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ்....

ஆவா குழுவுடன் தொடர்புடைய இன்னுமொருவர் கைது!

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரவீந்திரன் தருசன் என்ற இளைஞனே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞரின் முகநூலில் ஆவா குழுவினைச் சேர்ந்த நபர்களுடன் குழுவாக எடுக்கப்பட்ட புகைப்படம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தினை ஆதாரமாக வைத்தே இளைஞனை...

வெள்ளத்தில் மூழ்கியது மடு திருத்தலம் : யாத்திரீகர்கள் திரும்புகின்றனர்

வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடும் மழை பெய்து வருவதால் மடு அன்னையின் திருவிழாவை வழக்கமான முறையில் கொண்டாட முடியாதவாறு தடைப்பட்டுள்ளது. நாட்டின் நாலாபுறமும் இருந்து வந்த யாத்திரீகர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மடு திருத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் யாத்திரீகர்கள் தற்காலிகமாக அமைந்து தங்கியிருந்த கூடாரங்கள் அனைத்தும் வெள்ள...

வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்டவேளை, முச்சக்கர வண்டி புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். எனவே, இவ்விடத்தில்...

துன்னாலை அமைதியின்மை: குழுவின் தலைவர் கைதானார்

யாழ். துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமான குழுவின் தலைவரை இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக் காட்டுப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தற்போது இடம்பெற்று வரும் குழப்ப நிலைக்கு...

ICTA நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முகுந்தன் இராஜினாமா

இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியான முகுந்தன் கனகே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதற்கிணங்கவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார். தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட...

காணாமல் போனோரின் உறவினர் முன்னிலையில் கண்கலங்கிய இராணுவத்தளபதி

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு வழிபட்டுள்ளனர். இந்நிலையில் 64 ஆவது படைப்பிரிவு இராணுவத்தளபதி ஒருவர் ஆலய வழிபாட்டிற்காக அங்கு சென்றிருந்தார். இதன் போது காணாமல் போனோரின்...

முன்னாள் போராளிகளுக்கு பயிற்சிப் பட்டறை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான பயிற்சிப் பட்டறையொன்று, மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. ‘மகிழ்ச்சியான குடும்பம் நல்ல சூழலை உருவாக்கும்’ என்ற தொனிப்பொருளினால் ஆன இப் பயிற்சிப் பட்டறை, மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. பொருளாதாரம், சமூக இணைப்பு, மகிழ்ச்சியான குடும்பம், சிறுவர் மேம்பாடு போன்ற தலைப்புக்களின் கீழ் இதன்போது கலந்துரையாடப்பட்டன. புனர்வாழ்வு அதிகார...

யாழில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர தினம்

இந்திய சுதந்திர தின நிகழ்வுகள், யாழ்ப்பாணத்திலும் இன்று நடைபெற்றன. யாழில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தின் துணைத் தூதுவர் ஆ.நடராஜனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது இந்திய துணைத் தூதுவர் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, தொடர்ந்து இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீட...

குருநகர் கடலில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு!

குருநகர் கடலில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர், தண்ணீர்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் குடும்பத் தலைவர் ஒருவரே உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது. ஒரு படகில் நான்கு மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் ஒருவர் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகினார் என்று தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின்...
Loading posts...

All posts loaded

No more posts