ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆவா குழு தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது, அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பாக இன்டபோலுக்கு தகவல் தெரிவிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றவாளிகளுக்கு நிதிகள் கிடைத்தமை தொடர்பாகவும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர் என முதலமைச்சர் தெரிவித்தார்.