Ad Widget

முன்னாள் போராளிகளுக்கு பயிற்சிப் பட்டறை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான பயிற்சிப் பட்டறையொன்று, மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

‘மகிழ்ச்சியான குடும்பம் நல்ல சூழலை உருவாக்கும்’ என்ற தொனிப்பொருளினால் ஆன இப் பயிற்சிப் பட்டறை, மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

பொருளாதாரம், சமூக இணைப்பு, மகிழ்ச்சியான குடும்பம், சிறுவர் மேம்பாடு போன்ற தலைப்புக்களின் கீழ் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

புனர்வாழ்வு அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பயிற்சிப் பட்டறையில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

இப்பயிற்சிப் பட்டறையின் வளவாளர்களாக சிரேஷ்ட உளநல வைத்தியர் ஜூடி ரமேஷ் ஜெயகுமார், புனர்வாழ்வு அதிகாரசபையின் பிரதிநிதி மேஜர் பி.என்.அமரசிங்க மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts