காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு

தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 27, 28 ஆகிய திகதிகளில் புயலாக வலுப்பெறும். தமிழக கரையை நோக்கி புயல் நகர கூடும். 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30ம் திகதியும் மே 1ம் திகதியும்...

ஐ.ஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்ட இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டு நாடு திரும்பிய இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை சட்டப்படி அவர்களை கைது செய்ய முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
Ad Widget

பொலிஸ் உயர் பத­விகள் பல­வற்றில் அதிரடி மாற்றம்!

நாட்டில் ஏற்­பட்­டுள்ள, எதிர்­கா­லத்தில் ஏற்­படவுள்ள, பாது­காப்­பற்ற நிலைமை மற்றும் தேசிய பாது­காப்­புக்­கான அச்­சு­றுத்தல் உள்­ளிட்ட விட­யங்­களை ஆராய்ந்து பொலிஸ் திணைக்­க­ளத்தின் உயர் பத­விகள் பல­வற்றில் மாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அதன்­படி உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் பலரை ஆணைக்­குழு இட­மாற்­றி­யுள்­ளது. வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­பட்டு குறித்த உயர் பொலிஸ் அதி­கா­ரி­களை...

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்!

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பை ஒன்றால் பதற்றம் ஏற்பட்டது. எனினும் அந்தப் பை நீதிமன்றில் வழக்குக்காக வந்த ஒருவரினுடையது உன் விசாரணையில் தெரிய வர பதற்றம் தணிந்த்து. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தின் முன்பக்க வாயிலில் உள்புறமாக நீல நிற புத்தகப் பை காணப்பட்டது. அதனால் நீதிமன்றில் நின்றோர் குழப்பமடைந்த்தால் பதற்றம் ஏற்பட்டது....

வெடிப்புச் சம்பவங்கள் – யாழில் ஐவர் கைது

வெடிப்பச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ். அஞ்சு சந்தி வீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென யாழ்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு தீவிரம்

யாழ். இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் மற்றும் அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே இந்த சோதணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது....

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை இன்று வலுப்பெறும் சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

நாட்டில் மீண்டும் மின்சாரத்தடை!!

நாடு பூராகவும் மீண்டும் மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த மின்வெட்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டாலும் தொடர்ந்து மீண்டும் மின்சாரத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்ந்தும் சவாலாகவே இருப்பதனாலேயே மின்சாரத்தடை ஏற்படுத்தப்படவுள்ளது என தெரியவந்துள்ளது. அதன்படி குறித்த மின்வெட்டு கீழே திட்டமிடப்பட்ட கோரிக்கை முகாமைத்துவத்தின்படி...

சற்றுமுன் மீண்டும் குண்டு வெடிப்பு; பொலிஸ் அதிரடிப்படை குவிப்பு!

கம்பஹா பூகொட நீதிமன்றுக்கு அருகில் சற்றுமுன் சிறிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். குறித்த நீதிமன்றுக்கு அருகிலுள்ள வெற்றுக்காணியின் குப்பை மேட்டில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்லதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த வெடிப்புச் சம்பவத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் குறித்த இடத்திற்கு அதிரடிப்படையினர் சென்றுள்ளதுடன் பொலிஸார்...

பரிசுத்தமான தாக்குதல்’ என நியாயப்படுத்திய ஐ.எஸ்

இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, அவ்வமைப்பின் அமாக் செய்திப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ​அபு உபைதா, அபுல்பார மற்றும் அபுல் முக்தார் ஆகிய மூவரின் புகைப்படங்களும்...

யாழ்.கோட்டையில் தேடுதல்!!

யாழ்ப்பாணம் கோட்டையில் நேற்றையதினம் இரவு இரண்டாவது தடவையாகவும் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. பொதிகளுடன் மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாகனத்தில் வந்திறங்கி கோட்டைக்குள் நுழைந்தனர் என்று பொலிஸ் அவசர பிரிவு 119இற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் முன்னெடுக்கப்படுகிறது என அறியமுடிகிறது. அங்கு சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தேடுதல் நடத்தினர்....

கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் மீட்பு ; பொலிசார் விசாரணை

கிளிநொச்சி பளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் காலை முதல் குறித்த மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பளை பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆளில்லா விமானங்கள் மற்றும் Drone கெமராக்களை பறக்க விட தடை

இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கெமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளாது. நேற்று இரவு முதல் மள் அறிவிக்கும் வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்!

தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 தற்கொலை குண்டுதாரிகள் இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெண்ணொருவர் உள்ளடங்குகின்றார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் இடம்பெற்ற தொடர்...

வவுனியா வைத்தியசாலைக்குள் சோதனைகள் தீவிரம்

வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும் மக்கள் உள்ளே செல்லும் போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த தகவலின் அடிப்படியிலே இவ்வாறான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டதுடன் வைத்திசாலைக்கு வரும்...

இரண்டாம் கட்டத் தாக்குதல்களுக்கு தௌஹீத் ஜமாத் தயார் – இந்திய புலனாய்வு நிறுவனம் எச்சரிக்கை!!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பு இரண்டாவது தாக்குதல்களையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியப் புலனாய்வு இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது. இந்த தகவலை இந்திய புலனாய்வு நிறுவனத்தின் (NITE) மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி இந்திய ஆங்கில ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்ட...

யாழில் முஸ்லிம் இளைஞன் உட்பட மூவர் கைது! தொடரும் பதற்றம்!

யாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்த மூன்று பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க நாடடைச் சேர்ந்தவர், முஸ்லிம் இளைஞர் மற்றும் தமிழ் பெண் ஆகியோரே இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் ஆவார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தொடர் குண்டு வெடிப்பு...

வாகனங்களை நிறுத்தி வைப்போருக்கு விஷேட அறிவிப்பு

பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் முன்பக்கம் தெளிவாக தெரியக்கூடிய வகையிலும் வாகன உரிமையாளர்களின் கையடக்க தொலைப்பேசி இலக்கத்தை தெளிவாக காட்சிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களின் காரணமாக இதுவரையில் தற்பொழுது நாடு முழுவதிலும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பாதுகாப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் இவ்வாறு காட்சிப்படுத்துமாறும்...

தபாலில் சேர்ப்பதற்காக பொதியிட்டு கொண்டு வரப்படும் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா – தபால் மா அதிபர் அறிவிப்பு

தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட அதிகாரிக்கு அல்லது அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் பொதியிட்டு ஒப்படைக்கப்படும் பொதிகளை மாத்திரம் தபால் அலுவலகங்கள் பொறுப்பேற்குமாறு அனைத்து தபால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தபால்மா அதிபர் ரஞ்சித்...

தாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.

தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். இந்நிலையில் அந்த அமைப்பினர், குறித்த தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் 7 பேருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts