Ad Widget

பொலிஸ் உயர் பத­விகள் பல­வற்றில் அதிரடி மாற்றம்!

நாட்டில் ஏற்­பட்­டுள்ள, எதிர்­கா­லத்தில் ஏற்­படவுள்ள, பாது­காப்­பற்ற நிலைமை மற்றும் தேசிய பாது­காப்­புக்­கான அச்­சு­றுத்தல் உள்­ளிட்ட விட­யங்­களை ஆராய்ந்து பொலிஸ் திணைக்­க­ளத்தின் உயர் பத­விகள் பல­வற்றில் மாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

அதன்­படி உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் பலரை ஆணைக்­குழு இட­மாற்­றி­யுள்­ளது. வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­பட்டு குறித்த உயர் பொலிஸ் அதி­கா­ரி­களை இட­மாற்ற நேற்று கூடிய தேசிய பொலிஸ் ஆணைக் குழு தீர்­மா­னித்­துள்­ளது.

அதன்­படி புதிய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இது­வரை வடமேல் மற்றும் வட­மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக கட­மை­யாற்­றிய அபே­சிறி குண­வர்­தன நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

மேல் மாகா­ணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்த நந்­தன முன­சிங்க வடமேல் மற்றும் வட மத்­திய மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பாக இட­மாற்­றப்­பட்­டுள்ளார்.

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பத­வி­யிலும் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது. அதன்­படி கொழும்பின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க பொலிஸ் அபி­வி­ருத்தி பகு­திக்கு மாற்­றப்­பட்டு, கொழும்­புக்கு பொறுப்­பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த வீர­சூ­ரிய நிய­மிக்­கப்பட்­டுள்ளார்.

அத்­துடன் மேல் மாகா­ணத்தின் வடக்­குக்கு பொறுப்­பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­னகோன் புத்­த­ளத்­துக்கு மாற்­றப்ப்ட்டு அந்த இடத்­துக்கு புத்­தளம் பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இது­வரை இருந்த சம்­பிக்க சிறி­வர்­த­னவை நிய­மிக்க நேற்று பொலிஸ் ஆணைக் குழு தீர்­மா­னித்­துள்­ளது.

நீர்­கொ­ழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக இருந்த சந்­தன அத்­து­கோ­ரள திரு­கோ­ண­ம­லைக்கு மாற்­றப்­பட்டு திரு­மலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கே.கட்­டு­பிட்­டிய நீர்­கொ­ழும்­புக்கு பொறுப்­பாக அழைக்­கப்­பட்­டுள்ளார்.

கொழும்பு வடக்கு பொலிஸ் அத்­தி­யட்சர் சஞ்­ஜீவ பண்­டார சீத்­தா­வக்க பொலிஸ் பிரி­வுக்கு மாற்­றப்­பட்டு கொழும்பு வடக்­குக்கு பொறுப்­பாக ஏ.எம்.யூ. சந்­தன நிய­மிக்­கப்­பட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு மத்­திய பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த பொலிஸ் அத்­தி­யட்சர் ஜே.ஏ.யூ.பி. ஜய­சிங்க எல்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு மாற்­றப்­பட்டு எல்­பிட்­டிய பொலிஸ் அத்­தி­யட்சர் தல்­துவ கொழும்பு மத்­திய பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளார்.

அத்துடன் பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், களனி பொலிச் பிரிவுக்கு பொருப்பாக நியமிக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான பொலிஸ்அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

Related Posts