ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டு நாடு திரும்பிய இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை சட்டப்படி அவர்களை கைது செய்ய முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.