ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு புளொட் ஆதரவு!!

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே தமிழைரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது புளொட்டும் சஜித்தை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சிவாஜிலிங்கம் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணியளவில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தார். சிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஏனையவர்களை நிபந்தனையின்றி விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி வேட்பாளர்...
Ad Widget

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் பொலிஸார் தேடுதல்!! இருவர் கைது!!

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனமும் தாமும் தேடிவந்த வாகனமும் வேறு எனத் தெரிவித்துள்ள பொலிஸார், நீதிமன்றின் உத்தரவின் பேரில் வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். அத்துடன் வங்கி முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். வவுனியாவில் மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயணித்த...

மின்துண்டிப்பிற்கு எதிராக வவுனியாவில் இரவிரவாக போராட்டம்!

வவுனியாவில் 50இற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியதை தொடர்ந்து, பொறுமையிழந்த மக்கள் நேற்றிரவு வீதிக்கிறங்கினார்கள். வவுனியாவில் நான்கு இடங்களில் வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் ஏ9 வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. நேரம் செல்லச்செல்ல போராட்டம் தீவிரமடைந்து வவுனியப புகையிரத நிலையத்திற்கு அண்மையாக புகையிரதத்தையும் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருளில் மூழ்கியுள்ள வவுனியாவில்...

பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த ஆவா நீதி மன்றில் சரண்!!!

யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 2 வருடங்களாக தேடப்பட்டு வந்த “ஆவா” என காவற்துறையினரால் விழிக்கப்படும் இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று சரணடைந்தார். சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆவா குழுவின் முக்கியஸ்தர் எனவும் “ஆவா” எனவும் காவற்துறையினரால் குறிப்பிடப்படும்...

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக் கூடும்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று தற்காலிகமாக சிறிது குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. எனினும் சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில்சில இடங்களில் காலை வேளையிலும் மழையோ...

தமிழரசுக் கட்சி என்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை? – சிவாஜி

சிங்கள பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சி தன்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். மன்னார் தனியார் விடுதி ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது....

வெளிப்படைத் தன்மையற்ற விஞ்ஞாபனத்தை நம்பி எவ்வாறு வாக்களிக்க முடியும்? –சி.வி.விக்னேஸ்வரன்

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வாராந்தம் கேள்வி பதிலில், புதிய ஜனநாயக முன்னணியியன் ஜனாதிபதி வேட்பாளருடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர்...

விடுதலைப் போராட்டத்தை கருணா மாத்திரமே காட்டிக் கொடுத்தார் பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை!!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும் என்ற காரணத்தினால்தான் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினேன் என முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்தி பிரிவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தான் காட்டிக் கொடுத்ததாக...

புனர்வாழ்வு வழங்கப்பட்ட 20 பட்டதாரிகளுக்கு அரச வேலை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!!

புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 பட்டதாரி இளைஞர்களை வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கு வேலை வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த இளைஞர்கள் 20 பேருக்கும் புனர்வாழ்வு திணைகளத்தால் புனர்வாழ்வுக்கு உட்பட்டுள்ளதாகவும், புதிய திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கோரியுள்ளதாகவும் அமைச்சரவைக்கு பத்திரம் முன்வைக்கப்பட்டது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உயர் கல்விக்கு உட்பட்டிருந்தாலும், 20 பட்டதாரிகளும் “சிவில் சமூகங்களால் தங்கள் தகுதிநிலை...

முதியவர் உயிரிழப்பு!! சிகிச்சை வழங்குவதற்கு அக்கறை செலுத்தாத வைத்தியர் மீது தாக்குதல்!!

முதியவர் உயிரிழப்பை அடுத்து மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் அச்சுவேலி வைத்தியசாலையில் இடம்பெற்றது. இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றது. வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்த முதியவர், மருத்துவர் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பில் மருத்துவருக்கும் முதியவரின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து வைத்தியசாலையில் கூடிய முதியவரின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவரைத்...

கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களை தனித்தனியே சந்திக்கும் சம்பந்தன்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தீர்மானம் எடுத்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இன்று அல்லது நாளை கட்சியின்...

ஜனாதிபதி தேர்தலில் 13 போலி வேட்பாளர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலில் குறைந்தபட்சம் 13 போலி வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது. இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு களமிறங்கியுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் இந்த போலி வேட்பாளர்களில் ஏழு பேர் முக்கியமான ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவும் ஏனைய ஆறு பேர் மற்றொரு முக்கிய...

யாழிலிருந்து சென்னைக்கு வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை!! அலையன்ஸ் எயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சென்னை- யாழ்ப்பாணம் இடையே எதிர்வரும் 11ஆம் திகதி முதல் அலையன்ஸ் எயர் நிறுவனம் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. அதற்கமைய வாரத்தில் மூன்று நாட்களுக்கு விமான சேவைகள் இடம்பெறுமென அலையன்ஸ் எயர் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை அலையன்ஸ் எயர் நடத்தவுள்ளது. அதன்பின்னர், கூடிய...

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அறிவித்தல் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்ற கல்வி பணிமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும்...

இலங்கையில் வேகமாக பரவும் கண்நோய்! மக்களை எச்சாிக்கும் தேசிய கண் வைத்தியசாலை!!

இலங்கையில் மிகவேகமாக கண்நோய் பரவிவரும் நிலையில் மக்கள் மிக அவதான மாக இருக்குமாறு தேசிய கண் வைத்தியசாலை இயக்குனா் மோனிக்கா விஜேரத்ன எச்சாிக்கை விடுத்திருக்கின்றாா். கண்களில் கண்ணீர் வடிதல், கண் சிவத்தல் மற்றும் கண்களில் வலி ஆகிய அறிகுறி களே இந்த நோய் தொற்றிற்கான காரணமாகும். இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற...

யாழ்ப்பாணம் நகர மண்டப அடிக்கல் நாட்டுவிழாவின் மொத்தச் செலவீனம் 8இலட்சத்தினை தாண்டியது!!

யாழ்ப்பாணம் நகர மண்டப அடிக்கல் நாட்டுவிழாவின் மொத்தச் செலவீனமாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக மாநகர சபை கணக்கிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் நகர மண்டப அடிக்கல் விழாவிற்கான செலவீனத்தை மாநகர சபை ஏற்றுக்பொள்வது தொடர்பில் மாநகர சபைநில் சர்ச்சை ஏற்பட்ட சமயம் அடிக்கல் நாட்டுவிழாவுடன் பணி நிறுத்தப்பட்டால்...

யாழில் இடம்பெற்ற சஜித் பிரேமதாஸவிற்கான ஆதரவு கூட்டம்; பிரதமர் ரணில் பங்கேற்பு!

கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவிற்கான ஆதரவு கூட்டம் யாழ் தீவகம் துறையூரில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர்...

சிவாஜிலிங்கம் பதவி விலகல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம். நேற்று காலை பதவிவிலகல் கடிதத்தை கட்சியின் செயலாளரிடம் நேரடியாக வழங்கினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக இதுவரை சிவாஜிலிங்கம் பதவி வகித்து வந்திருந்தார். இந் நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கட்சிக்கு தெரியாமல் அறிவித்தல்...

சஜித்திற்கான ஆதரவு ; கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் – சுமந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை வவுனியாவில் நடைபெற்றது. இம் மத்திய குழு கூட்டத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts