Ad Widget

சொகுசுக் காரில் பயணித்த காரைநகர் வர்த்தகரின் குடும்பத்தில் நால்வர் சாவு!!

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்து – சொகுசுக் கார் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் சொகுசுக் காரில் பயணித்தவர்களே உயிரிழந்தனர்.

பேருந்துக்கு வைக்கப்பட்ட தீ சொகுசுக் காருக்கும் பரவியதால் அதன் சாரதி எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

காரைநகரைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது – 83), ஆறுமுகம் தேவராஜா (வயது – 62), தேவராஜா சுகந்தினி (வயது – 51), தேவராஜா சுதர்சன் (வயது – 30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது – 24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சோமசுந்தரம் லக்சனா (வயது – 29) காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்தில் பயணித்த 25 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts