Ad Widget

புதுச்சேரி- யாழ் கப்பல் சேவை விரைவில்: இந்தியா அறிவிப்பு!

புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வருதை தந்த மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் உரங்கள், இரசாயனத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை கோயில் இணை ஆணையா் ந. நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனா். கோயிலில் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் மத்திய அமைச்சா் சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னா் கோயில் வாயிலில் செய்தியாளா்களிடம் மத்திய இணைஅமைச்சா் மன்சுக் மாண்டியா கூறியது:

இந்தியா – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றாா்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷண்ணன் உடனிருந்தாா்.

Related Posts