- Tuesday
- September 15th, 2026
லண்டனில் கார் உதிரி பாக நிறுவனத்துடன் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் 11 ஆயிரம் கோடி இந்திய ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டன. இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- இங்கிலாந்து, லண்டன் நகரில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும்...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (10), அக்கட்சிக்கு எதிராகத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்தார். வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது என்று இதன்போது வலியுறுத்திய அவர், அவசரநிலைக் காலத்தில் திமுக மேற்கொண்ட போராட்டங்களையும், குறிப்பாக ‘உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின்’ (MISA) கீழ் தான் கைது செய்யப்பட்டதையும்,...
என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என தமிழக முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கப் பதிவில், சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று பொலிஸ் மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது...
நேற்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சம்பளங்கள் சட்ட திருத்த மசோதாவைத் தாக்கல் செய்த முதலமைச்சர் விஜய், தொடர்ந்து காவல்துறை மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசினார். அப்போது எதிர்க்கட்சியினரைப் பார்த்து, "மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?" எனக்...
தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், சென்னையில் சர்வதேச தரத்திலான 'மோட்டார் ஸ்போர்ட் சிட்டி' (Motor Sports City) அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் (விதி 110-ன் கீழ்) அறிவித்துள்ளார். அதாவது, தமிழ்நாட்டை சர்வதேச அளவிலான மோட்டார் பந்தயங்களின் முக்கிய மையமாக மாற்றுவதே இந்த முன்னெடுப்பின் முதன்மை நோக்கமாகும். அதன்படி,...
உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் விளையாட்டுக்கென பிரத்யேக நகரம் ஆகியவற்றை அமைக்கும் திட்டங்களை அறிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் விளையாட்டுத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நேற்று (03) உரையாற்றிய முதலமைச்சர், சென்னையில் ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ (Tamil Nadu Olympic City) அமைக்கப்படவுள்ளதாக அறிவித்தார்....
ஓடும் ரயிலின் ஏ.சி. பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவரை ரயில்வே பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் கரீபா (வயது55). இவர் டெல்லியில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த 'ஹசரத் நிஜாமுதீன்-மைசூரு எக்ஸ்பிரஸ்' ரயிலின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். ரயில்...
தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 முக்கியக் ஆலயங்களுக்குள் ஸ்மார்ட் மொபைல்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுலுக்கு வந்துள்ளன. ஸ்மார்ட் மொபைல்களை எடுத்து வரும் பக்தர்கள் அவற்றை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து, ஒரு போனுக்கு 5 ரூபாய் கட்டணம்...
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதலமைச்சர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, ஏழை எளிய மக்களிடம் நிதியுதவி மற்றும் கடன் வாங்கித் தருவதாகக்...
இந்தியாவின் பஞ்சாப் ஷஹீத் பகத் சிங் நகர் பகுதியில் இன்று (02) அதிகாலை 1.44 மணியளவில் ரிக்டர் அளவில் 3 நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.124 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.040 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில்...
இந்தியாவின் தோல்ப்பூர் மாவட்டம் நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ரவி குமார் (21), அவரது சகோதரிகள் மனோரமா (22), போட்டோ (25) மற்றும் அவர்களின் உறவினர் பெண் நிஷா (18) ஆகிய நால்வரும் பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா திருக்கோயிலுக்குச் சென்றிருந்தனர். ரக்ஷா பந்தனை முன்னிட்டு கடந்த 29 ஆம் திகதி இரவு நடைபெற்ற...
இந்தியாவின் மேற்கு வங்க அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் ஒரே வாரத்தில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரே நாளில் 10...
இந்தியாவில் பெற்றோர் ஐபோன் வாங்கித் தர மறுத்ததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் மலையிலிருந்து குதித்துத் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அவரைக் காப்பாற்றச் சென்ற பெற்றோர் அவருடன் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் கூறி செய்தித் தளங்கள் மற்றுமு் சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது எனத் தகவல்களைச் சரிபார்க்கும் அமைப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஊடகங்கள்...
குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டிய அரசுப் பொருளான கைவிலங்கை, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் தனது ஹெல்மெட் திருடு போகாமல் இருக்க பைக்கில் பூட்டி வைத்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த காவல் நிலைய வளாகத்திலேயே காவலரின் பொருளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையையும், அரசுப் பொருளைச் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய துறை சார்ந்த...
இந்திய பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியா?, விஜய்யா? என்ற விஷயத்தில் காங்கிரஸ் - த.வெ.க கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேவை 118 ஆக இருக்க, அக்கட்சிக்கு 107 இடங்களே கிடைத்தன. இதனால், காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2),...
இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூகக் குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்கள் அல்லது சமூகத்தினருக்கு தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது வழக்கமான ஒன்று. கடந்த...
இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இன்று (24) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பா பகுதியில் அதிகாலை 3.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 8 கி.மீ.கடல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,...
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 48 வயதான பாடசாலை அதிபர் 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 10ஆம் தரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி, கடந்த 12ஆம் திகதி தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்....
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவற்றாபகுதியில் வாடகை வீட்டில் கொல்லத்தை சேர்ந்த 65 வயது முதியவர் வசித்து வந்தார். அங்கு மனைவி, மகள் மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது பேத்தியும் தங்கியிருந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் மற்றும் அவரது 13 வயது பேத்தி மட்டும் வீட்டில் இருந்தனர். முதியவரின்...
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. சுற்றுலா - கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதற்கு அத்துறை அமைச்சர்...
Loading posts...
All posts loaded
No more posts
