தலைமன்னார் – ராமேஸ்வரம் இடையே புதிய படகுப் பாதை குறித்து விவாதம்!

மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, ​​அந்நாட்டு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகேவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

இதன்போது, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய பாதையை தொடங்குவதன் மூலம் இந்தியா-இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சு,

” 2025 இந்தியா கடல்சார் வாரத்தில் பொதுத்துறை மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்த சோனோவால் மற்றும் இலங்கை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுரா கருணாதிலகே இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.

இந்தியா-இலங்கை படகு சேவை மூலம் கடல்சார் இணைப்பை மேம்படுத்துவது மற்றும் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையே ஒரு புதிய பாதையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான தொடர்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

நாகப்பட்டினம் (தமிழ்நாடு) மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையேயான தற்போதைய பாதையுடன் சேர்த்து, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய படகுப் பாதையை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தியா விவாதித்து வருகிறது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சு மும்பையில் நடத்திய 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது இந்த விவாதங்கள் நடைபெற்றன.

அக்டோபர் 27 ஆம் திகதி தொடங்கிய இந்த வாரம் ஒக்டோபர் 31 வரை தொடரும்.

Related Posts