- Monday
- October 27th, 2025
தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (15) காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத்தூபியில் நடைபெற்றன. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில்...
எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த வெப்பத்தை மனித உடலால் உணரக்கூடியதாக இருக்குமென்றும் அத்திணைக்களம் கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிக நீர் அருந்துமாறும், வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க...
தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது தமது எஜமானர்களுக்கு சேவகம் செய்வதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில இடங்களில் சுமார் 50 மி.மீ. வரை...
பல்வேறு காரணிகளால் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள் குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது . யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது...
யுத்த காலத்தில் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துக் கொண்டிருந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள். பிரபாகரனை பயங்கரவாதி என்று முடிந்தால் குறிப்பிடுங்கள். பிரபாகரன் குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கோருகிறேன் என யாழ். மாவட்ட சுயேட்சைக்கு குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள்...
நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சுமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் அறிவித்துள்ளார். நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின் பெருக்கத்தினைக்...
2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம். வாய்மொழி...
யாழ் மாவட்டத்தில் டெங்குநோயின் பரம்பல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 937டெங்குநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இந்த வருடத்தில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவுசெய்யப்படவில்லை என யாழ். பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் பருவமழைக்காலம் ஆரம்பிக்க...
மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை எனவும் இந்நிலை இவ்வாறே இருந்தால் இது வேலைநிறுத்தமாக தீவிரப்படுத்தப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க போராட்டத்தின் முதல்...
செம்மணியில் இராணுவத்தால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் அனுட்டிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில் இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு...
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் ஞாயிற்றுக்கிழமை (7) திறந்து வைக்கப்பட்டது. பலாலி வீதி, கந்தர்மடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பொதுமக்கள் தொடர்பு காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 5 மணியளவில் குறித்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கடற்றொழில்...
செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார...
சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவன், பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 31ஆம் திகதி பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 29 ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை 10ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தளத்தில் பார்வையிடவும். மாவட்ட வெட்டுப்புள்ளி விபரம் வருமாறு;
இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள் தொடர்பிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும்...
வடக்குக்கு மீண்டும் உயிரோட்டத்தை கொண்டுவந்து அந்த மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடியை முன்னால் வைத்த அந்த மக்களை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதாக தெரிவித்த ஜனாதிபதி, வடக்கிற்கு புதிய...
வட்டுவாகல் பாலத்தின் நிர்மானப்பணிக்காக அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை திரை நீக்கம் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அனுரகுமார திசாநாக்க பங்குபற்றியிருந்தார். ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் பெயர்ப்பலகையின் திரையினை பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் அவர்கள் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் விமல் ரட்நாயக்க, அமைச்சர் சந்திரசேகரன்,பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன். பிரதி அமைச்சர் உபாலி,பாராளுமன்ற உறுப்பினர்...
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 41வது நாளாக நேற்று...
Loading posts...
All posts loaded
No more posts
