வடக்கில் கல்வித் துறை பின்னடைவுக்கு நிர்வாக பிரச்சனையே காரணம்!

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார். வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03) வவுனியா...

செம்மணியில் சான்று பொருட்களை காட்சிப்படுத்தல் – மக்கள் பின்பற்றவேண்டிய முக்கிய கட்டளைகள்!

செம்மணி மனித புதைகுழிகளின் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொது மக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காட்சிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 05 ஆம் திகதி 13.30 மணியிலிருந்து 17.00 மணி வரை காட்சிப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. பொது மக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது...
Ad Widget

நல்லூர் கோயில், நாகவிகாரை மற்றும் யாழ். நூலகத்திற்கு பிரதமர் விஜயம்!!

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வடமாகாண அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஞாயிற்றுக்கிழமை (03) முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ். ஸ்ரீ நாகவிகாரை மற்றும் யாழ். நூலகம் ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்தார். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு காலை சென்ற பிரதமர், அங்கு...

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையமா?

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு...

குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம்!

செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து...

வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கில் இடியுடன் கூடிய மழை!!

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

வடக்கு ஜப்பானை தாக்கியது முதல் சுனாமி பேரலைகள்!!

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பானை சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளது. இந்த சுனாமி பேரலை ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவில் சுமார் 30 சென்டிமீட்டர் (ஒரு அடி) உயரத்திற்கு மேலெழுந்துள்ளது. அங்கு அடுத்தடுத்த அலைகள் மிக அதிகமாக தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின்...

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு : தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு!

நாவற்குழி பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று...

வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில், வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை...

புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!!

செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று (28) புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் செயலிழந்த மின் தூக்கி, நோயாளர்களை ஏற்றி இறக்கும் பணிகளில் மாணவர்கள்!!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பயன்பாட்டில் இருந்த ஒரேயொரு மின் தூக்கி செயலிழந்த நிலையில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள் உட்பட சத்திர சிகிச்சை கூடம் என பெரும்பாலான நடவடிக்கைகள் முதலாவது மாடியில் காணப்படுவதனால் நோயாளர்கள் படிக்கட்டு வழியாக ஏற்றி இறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட நோயாளர்கள்...

இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்!!

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (உரோம்) உடன்படிக்கையில் கையெழுத்திடா விட்டாலும் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் இன அழிப்பு ஆகியவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான வழிகள் இருப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (YMCA) மண்டபத்தில் சரேஷ்ட...

யாழில் தீப்பந்த போராட்டம்!

நேற்று (27) மாலை 7 மணியளவில் யாழ். நெல்லியடி பேருந்து நிலையத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது தீப்பந்த போராட்டம் இடம்பெற்றதுடன் கட்சியின் செயலாளர் MA.சுமந்திரன், மாநகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்று முன்தினம் (23) மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் , சுதுமலை பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நேசராஜன் சர்வேந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது....

வடகிழக்கில் நாளை இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் – கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம்,...

செம்மணி மனித புதைகுழி: 9 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 3 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று நான்காவது நாளாகவும் அகழ்வு...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். மேற்படி பரீட்சை நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கிணங்க முதலாவது வினாப்பத்திரம் முற்பகல் 9. 30 முதல்...

‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் பாரிய சதித்திட்டம்!!

எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் 'நட்புறவுப் பாலம்' என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எச்சரித்துள்ளார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்த...

கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து டி-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் அவர் இந்தத்...

செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு 11.7 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு : இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு !

வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 10 நாள் இடைவேளைக்குப் பின்னர் அகழ்வாய்வின் முதல் நாளில் மேலும் ஏழு எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், அகழ்வாய்வுத் தளத்தில் வைத்து திங்கட்கிழமை ( 21...
Loading posts...

All posts loaded

No more posts