- Friday
- May 1st, 2026
யாழ் மாவட்டத்தில் தற்போது வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றது வேகத்தை குறைத்து விவேகமாக செயற்படுவதன் மூலமே விபத்துக்களை குறைக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து கருத்து...
மாதகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நில அளவைத் தினைக்களத்தினர் வருகை தந்த போது அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை நில அளவைத் திணைக்களத்தினர் கடற்படையினருக்கு அளப்பதற்கு நேற்று (வியாழக்கிழமை) வருகை தந்திருந்தனர்.இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நில...
யாழ்.கொழும்புத்துறை பகுதியில் கும்பல் ஒன்று வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்து வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. கொழும்புத்துறை பகுதியில் நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த கவிசந்திரன் சிவனேஸ்வரன் (வயது 25) எனும் இளைஞனே காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன்...
தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன்,...
புதிய அரசியல் அமைப்பில் நியாயமான தீர்வொன்று தேசிய இனப்பிரச்சினைக்கு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். 9ஆவது நாடாளுமன்றின் முதல் அமர்வில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு வாழ்த்து தெரிவித்த அவர், நாட்டில் 70 ஆண்டுகளாக இழுபறியில்...
தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்றில் வலியுறுத்தினார். புதிய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவை வாழ்த்தி உரையாற்ற கட்சிகளின் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்போதே விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார். “வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.ஒவ்வொரு செயலுக்கும் அதன் எதிர் எதிர்வினை இருக்கும்” என்று தெரிவித்த...
மாணவர்களுடைய சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தக் கூடிய வகைகள் வகுப்பறைகள் ஒழுங்கமைக்கப்பட்டால் அனைத்துப் பாடசாலைகளை முழுமையாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்துத் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதும் 200 பேருக்கு அதிகமாக மாணவர்களைக்...
மன்னாரில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் எம்.அமீனை, நேற்று புதன் கிழமை(19) மாலை மன்னார் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மன்றில் முன் வைத்த விண்ணப்பங்களை பரிசீலினை...
9ஆவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்படவுள்ளார். ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாளைக் காலை கூடும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. அந்தப் பதவிக்கு மகிந்த யாப்பா அபேவரத்தன முன்மொழியப்படவுள்ளார். பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலப்பிட்டியவின் பெயர் முன்மொழியப்படவுள்ளது. குழுக்களின்...
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசனம் வெளியிட்டுள்ளார். புதிய அரசாங்கத்திற்கு இதுவரை அவ்வாறான நோக்கங்கள் எதுவும் கிடையாது எனவும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை யாரும் மேற்கொள்ள வேண்டாம் எனவும்...
நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு முழுவதும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்தது. எனினும் தற்போது...
தொழில் வாய்ப்பின்றி காணப்படும் வேலையற்ற பட்டதாரிகள் மேலும் 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டத்தில்...
இலங்கை அரச போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து இலஞ்சம் வாங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் குறித்த முகாமையாளரை கைது செய்துள்ளனர். முறைப்பாடு ஒன்றை சீர்செய்யும் வகையில் மன்னாரில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இலஞ்சம் வாங்கி குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல்...
புதிதாக பதிவு செய்வதற்காக 160 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு விண்ணப்பித்த நிலையில் அவை தொடர்பான பரிசீலனைகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. கடந்த காலத்தில் புதிய அரசியல் கட்சியின் பதிவிற்காக 160 கட்சிகள் விண்ணப்பித்திருந்தபோது தேர்தல் அறிவித்தல் வெளியானது. இதனால் புதிய கட்சிகளின் அங்கீகாரம் தடைப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுற்றதனால் புதிய கட்சிகளின் பதிவினை...
தற்கால அரசியலில் எந்த அடிப்படையில் எதை ஆதராமாகக் கொண்டு இந்த துரோகி நிகழ்ச்சி நிரல் பட்டங்கள் வழங்கப்படுகின்றன? இதன் மூலம் எதனைச் சாதிக்கின்றீர்கள். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தான் சார்ந்த கட்சி பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஈழத்தின் புகழ் பூத்த பொருளியல் ஆசானும் பேராதனை பல்கலைக்கழகத்தின்...
நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 04 நாட்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. முழுநாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, வலய ரீதியாக, மாலை 6-7 மணி, இரவு 7-8 மணி, இரவு 8-9 மணி மற்றும்...
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள காணியில் பெண் ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் வெளிப்பட்ட நிலையில்,நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில் மேலும் சில உடற்கூறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இடத்தில் பற்பசை, பல் துலக்கும் தூரிகை, சீப்பு, பவுடர் பேணி, 3 மேற்சட்டைகள், பாவடை ஒன்று உள்ளிட்டவை துணியிலான கைப்பையில் காணப்பட்டுள்ளன. அவற்றை வைத்து...
இந்தோனேசிய சுமத்ரா தீவிற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது. 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்த...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்துவிட்டதால் நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை நாடுமுழுவதுவம் மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துவிட்டது என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார். இந்த தகவலை கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. நுரைச்சோலை அனல்...
யாழில். இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பில் குழப்பங்கள் தேவையில்லை – வணிகர் சங்கம்
‘யாழ்ப்பாணத்தில் இயலுமாக இருந்தால் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபார நடவடிக்கைகளை முன்னெடடுக்கலாம். வீண் குழப்பங்கள் தேவையில்லை’ என யாழ்.வணிகர் சங்கத்தின் உப தலைவர் ஆர். ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
