உணவு தவிர்ப்புப் போராட்டத்து தடை உத்தரவு கோரி பொலிஸார் விண்ணப்பம்!

திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தலைமையில் இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம்...

வடக்கில் இன்று மழையுடனான காலநிலை!!

வடக்கு உள்பட நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதுதொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது...
Ad Widget

மிருசுவில் படுகொலையாளிக்கு மன்னிப்பு : மனுக்களை பரிசீலிப்பதிலிருந்து விலகிய நீதியரசர்!!

யாழ்ப்பாணம், மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன நேற்று...

தொழிலைத் தேடி பட்டதாரிகள் வீதிக்கு இறங்காமல் அவர்களைத் தேடி தொழில் செல்லக் கூடிய கல்வி முறைமை – ஜனாதிபதி

பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரை செல்வதற்கு அவசியமான நடவடிக்கையுடன் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு இறங்காத, தொழிற்சந்தை பட்டதாரிகளை தேடிச் செல்லக்கூடிய கல்வி முறைமையொன்றின் உடனடி அவசியம் பற்றி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார். பல்கலைக்கழகங்கள், பட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களாக மட்டும் இல்லாமல் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் அதேபோல் பட்டம் பெறுவோரும்...

தனியார் வகுப்புகளை நடத்தும் இறுதித் திகதி அறிவிப்பு!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகள் நடத்துவதற்கான இறுதி திகதி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனைத்து தனியார் கல்வி வகுப்புகளும் ஒக்டோபர் 6ஆம் திகதிக்குள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான...

யாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைய, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நடவடிக்கை கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பருவகால மீனவர்களிடமிருந்தும் தென்னிலங்கை பிரதேசங்களில் இருந்தும் யாழ்ப்பாண மீனர்வர்களினால் கொள்வனவு செய்யப்பட்ட கடற்றொழில் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படாமல் இருந்த...

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணை!

தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல்செய்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதவான்...

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்வோரை பதிவுசெய்யும் பொலிஸார்!

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த பதிவு நடவடிக்கை கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் ஆலயத்திற்கு வருகைதரும் பொதுமக்களின்...

வடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி!

வடக்குக் கிழக்கில் உயர்தரத்தில் கல்விகற்று வேலை தேடும் இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக தொழில்வாய்ப்பு உத்திகளுக்கான விமானப் போக்குவரத்துக் கல்லூரி மையத்தினை அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துறையாடல் நேற்று (புதன்கிழமை)...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை நீடித்து நீதிமன்றம் கட்டளை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. பிரதிவாதிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்த நீதிமன்றம், வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்தக் கோரிய மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திகுமார், கஜேந்திரன், யாழ்ப்பாணம்...

ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ். பல்கலையின் துணைவேந்தர் நியமனம்!

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2194/ 29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியில், “இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையினால்...

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்!

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. நேற்றைய தினம் பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாகத் தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறு கோரியே இந்தப் போராட்டம்...

அரசியல் நோக்கத்திற்காக சிலர் குழப்பம் விளைவிக்கின்றனர் – டக்ளஸ்

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று( புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவிதார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,...

அனைத்து கிராம சேவகர்களுக்கும் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் கிராம சேவகர்களினால் ஆற்றப்பட வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புக்களை முறைமைப்படுத்தும் சுற்றுநிரூபம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், கிராம சேவகர்கள் தமக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதை முறைமைப்படுத்தும் விதமாக உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் உள்நாட்டு அலுவல்கள் தொடர்பான 16/2020 இலக்க சுற்றுநிரூபம்...

ஒரு குடும்ப ஆட்சி யாழ்ப்பாண அரச செயலகத்தில் நடைபெறுகிறது – சிறீதரன்

ஒரு குடும்ப ஆட்சி யாழ்ப்பாண அரச செயலகத்தில் நடைபெறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மிக முக்கியமாக தேர்தல் ஆணைக்குழு பற்றிய பல்வேறுபட்ட கருத்துக்கள் இந்த சபையிலே பல உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது....

நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரரைத் தரிசிக்கத் திரளுங்கள் – ஆலய பரிபாலன சபை

நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரரைத் தரிசிக்கத் திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆலய பரிபாலன சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம். நம் நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாளை அண்மித்திருக்கிறோம். எங்கே இருக்கிறார் இந்த ஆதி லிங்கேஸ்வரர்? வவுனியா மாவட்டத்தின்,...

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கேசன்துறையில் உள்ள அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில் வடக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா...

பட்டபகலில் வீடு புகுந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து கொள்ளையிட்ட இருவர் சிக்கினர்!!

பட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற அதிபருக்கும் அவரது துணைவியாருக்கும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து நகைகளை கொள்ளையிட்டுத் தப்பித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமைலப் பகுதியில் பட்டப்பகலில் இந்தக் கொள்ளைச் சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. “ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டுக்குள் கொட்டான்கள், கத்திகளுடன் உள்நுழைந்த இருவர்,...

திலீபன் என்கிற புனிதமான பெயரைக் கூட உச்சரிக்கத் தகுதியற்றவர் டக்ளஸ் – சுகாஷ்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திலீபன் என்கிற புனிதமான பெயரைக் கூட உச்சரிக்கத் தகுதியற்ற நபராவார். அப்படியானவர் தியாக தீபம் திலீபனைப் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்து எனக்கு ஒரு வாசகத்தை ஞாபகப்படுத்துகிறது. “சாத்தான்கள் வேதம் ஓதக்கூடாது”. இவ்வாறு சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் “அரசியலுக்காக திலீபனை எல்லாம்...

பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாகர்கோவில் படுகொலையின் 25ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

நாகர்கோவிலில் 1995ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினமாகும். இதற்கு பாதுகாப்பு தரப்பு மற்றும் வலய கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆகவே, பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் ஆறாம் ஆண்டிற்கு மேற்பட்ட மாணவர்களே...
Loading posts...

All posts loaded

No more posts