யாழ் பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி பறக்க விடப்பட்டது

நேற்றய தினம் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது மன்னிப்பின் கீழ் 17 கைதிகள் விடுதலை!!

சுதந்திர தினமான நேற்றைய தினம் (04) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவர்களில் பெண் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார். 77 ஆவது சுதந்திர தினமான நேற்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்...
Ad Widget

வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் யாழில் பட்டதாரி இளைஞன் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் செவ்வாய்க்கிழமை (4) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். யாழ். கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த தங்கவேல் விபுசன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை...

கிளிநொச்சியில் உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்று உத்தரவு!!

கிளிநொச்சியில் தனியார் பன்றிப் பண்ணை ஒன்றில் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி மன்றுக்கு அறிக்கை இடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பன்றி வளர்ப்பு பண்ணையில் திடீரென கடந்த சனிக்கிழமை (01) ம் திகதியும் ஞாயிற்றுக்கிழமை (02)ம் தொடர்ச்சியாக 50க்கும்...

யாழில் அதீத போதை காரணமாக இளைஞன் உயிரிழப்பு!!

அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார் திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் சிறு...

நாட்டில் சிக்கன்குனியா பரவும் அபாயம் தீவிரம்!

நாட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிக்கன்குனியா நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, அண்மையில் குழந்தைகளும் முதியவர்களும் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, உடலில் கருமைத் தன்மை ஏற்படுதல், குறிப்பாக மூக்கைச் சுற்றி நிறமாற்றம் போன்றவை இந்த...

ஜனாதிபதி அநுர யாழ் செல்ல விமானத்தை பயன்படுத்தவில்லை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்திற்கு இலங்கை விமானப் படையின் 3 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி 31ஆம் திகதி ஜனாதிபதி யாழிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இலங்கை விமானப் படையின் 03 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற விடயங்கள் தொடர்பில்...

விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் மாற்றுக்காணியை கேட்டனர்!

காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்க வேண்டும் என தன்னிடம் கோரியிருந்தனர் என வடமாகாண ஆளுநர் நா, வேதநாயகன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை...

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகின்றது! -நீதிபதி இளஞ்செழியன்

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில்இ வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று முன்தினம் (01) ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற...

புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் முறைப்பாடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்கனவே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி,...

மாவை சேனாதிராஜாவின் இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82வது வயதில் நேற்று (புதன்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காலமாகியுள்ளார் குளியலறையில் கால் தடுக்கி கீழே விழுந்ததால் தலையிலுள்ள நரம்பொன்று பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்....

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் சிறப்பு காவல் குழுவினால் புதன்கிழமை (29) பிற்பகல் கைது செய்யப்பட்டு அன்று இரவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் அவரை தலா 200,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியது. அதன்படி, இந்த வழக்கு...

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட வைத்திய சேவைகள்!!

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் புதன்கிழமை (29) சிறுதுநேரம் வெளிநோயாளர்பிரிவின் வைத்தியசேவைகள் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிடப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி பிறிதொரு வைத்தியரை வைத்திய சேவையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டார். அத்தோடு உடனடியாக வைத்தியசாலைக்கு...

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலைகள்!

நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு,உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வெள்ளை முட்டையின் விலை 28-35 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 870-1,000 ரூபாவாகவும்,ஒரு...

நெல்லியடியில் பச்சை குத்தும் நிலையம் மூடப்பட்டது!!

நெல்லியடியில் துஷ்பிரயோகங்கள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட பச்சை குத்தும் நிலையம் ஒன்று வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையினால் மூடப்பட்டுள்ளது. குறித்த பச்சை குத்தும் நிலையத்தில், சிறுவர்களுக்கு பச்சை குத்தப்பட்டதாகவும், துஸ்பிரயோகங்கள் நடைபெற்றதாகவும், சுகாதாரத்திற்கு தீங்கான வகையில் பச்சை குத்தும் செயற்பாடுகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அது தொடர்பில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த...

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!!

2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (G.C.E O/L) பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26ஆம் திகதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு பிரவேசித்து...

அசெளகரியங்களை ஏற்படுத்தும் தனியார் பேருந்தினர்!!

அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி தனியார் பேருந்தினர் பயணிகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். நேற்று (27) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகளவான பயணிகளை ஏற்றியவாறு பயணித்த பேருந்தின் காப்பாளர், பயணிகளின் இருக்கைக்கு மேலாக கடந்து சென்று அசௌகரியங்களை ஏற்படுத்தியமை பயணிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கும் முகமாலை பகுதிக்கும் இடையில்...

நாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் காற்றின் தரம்!

கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு,...

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம்!

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது. இதன்போது இந்திய...

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தின் பின்னர்...
Loading posts...

All posts loaded

No more posts