ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர இரண்டு நிமிடங்கள் ஒதுக்குங்கள் – பேராயர் அழைப்பு!

ஈஸ்டர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று (புதன்கிழமை) காலை 8.45மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், பேராயர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதேநேரம், இந்தத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கொழும்பு –...

பருத்தித்துறை- அல்வாயில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்

வடமராட்சி- பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 2பிள்ளைகளின் தந்தையான மு.கௌசிகன் (வயது 31) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் பின்னர் வாள்...
Ad Widget

கூட்டமைப்பின் அறிக்கையினால் அரசு மகிழ்ச்சி!

மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையினால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில், கடந்த அரசாங்கத்தில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தொடர்புபட்டிருந்தது என கூறினார். முன்னாள் அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டு தவறாக அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலம் காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்த...

நிலாவரையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தியதாக வலி.கிழக்கு தவிசாளர் மீது வழக்கு

நிலாவரையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப் பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள விசாரணையில் உள்ள வழக்கு என மத்திய அரசின் திணைக்களங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு...

ஏப்ரல் 27இல் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பம்

ஏப்ரல் 27 செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். “விடுதிகளை திறப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பல்கலைக்கழகத்தின் தொடக்கத்தில் 4 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதல்...

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு தர முயற்சிக்கிறதா? – சிவாஜி கேள்வி

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு இலங்கை மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே நடைபெறுகிறது. குறிப்பாக...

யாழ்ப்பாணத்தில் நான்கு பொலிஸார் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அதன்படி யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் என்றும் ஏனைய நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் என்றும் வைத்தியர்...

தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் – சிவாஜி

தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கு செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்கால மாகாண முதலமைச்சர்வேட்பாளர் தொடர்பில் அரசியல்வாதிகளால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில், இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா?...

எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை!!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் சில வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகும் என்று அந்தப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். பண்டிகை காலப்பகுதியில் சிலர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா நோய் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கல்வியங்காடு , வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த 77 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சடலத்தை சுகாதார விதிமுறைகளின்...

பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் திருட்டு; மூவர் சிக்கினர்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, முழங்காவில், குமுழமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது...

யாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா திறந்துவைப்பார் என பல்கலை மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி எட்டாம்...

திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா!

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் 386 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக...

யாழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்வது குறித்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானி கருத்து தெரிவிப்பு

"கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் ஆட்சேர்ப்புப் பணியின் போது 1600 க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை இராணுவத்தில் சேர்ப்பது, அந்த இளைஞர்கள் எங்கள் அமைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் உயர்ந்த மரியாதையையும் கடுமையாக உறுதிப்படுத்துகிறது தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், பல்வேறு அதிருப்தி மற்றும் பிளவுபடுத்தும் கூறுகள் அவர்களைத் தூண்ட...

இராணுவத் தளபதியால் யாழ்பாணத்தில் மற்றுமொரு வீடு கையளிப்பு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும், கோவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கான தனது விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தின் கிராண்ட் பஜாரில் இராணுவத்தால் வரிய குடுமபத்திற்காக கட்டப்பட்ட புதிய வீட்டை (12)கையளித்தார். யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்தா...

கொரோனா வைரஸால் அனைவரும் திடமான மனதுடன் வாழ வேண்டும்!

கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். அந்த பரிந்துரைகள் பினவருமாறு: கொரோனா...

திருநெல்வேலியில் எண்மர் உள்பட வடக்கில் 10 பேருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 186 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 10...

வடமராட்சியில் எஸ்ரிஎப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்!!

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் மணல் கடத்தலில் ஈடுபட முற்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தி்ல் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது....

சாவகச்சேரியை சேர்ந்த பெண் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். முள்ளேரியா தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார். பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முள்ளேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளது

முல்லைத்தீவில் மின்னல்தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு

முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு 03 கண்டம் வயல்வெளிப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள். நேற்று (15)மாலைவேளை தண்ணிமுறிப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்துவந்துள்ளது. குமுழமுனை பகுதியனை சேர்ந்த இரு விவசாயிகளும்,கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த ஒரு விவசாயியும் குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை மின்னல் தாக்குதலுக்கு...
Loading posts...

All posts loaded

No more posts