எரிபொருள் விலையை குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்

பொது மக்களின் நலன்கருதி எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார். நிதி அமைச்சில் தமது கடைமைகளை பொறுப்பேற்ற...

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லம்ப்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு...
Ad Widget

தரம் 5 புலமைப்பரிசில், ஏஎல் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரணதரப் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 29ஆம் திகதிவரை இடம்பெறுகிறது. க.பொ....

யாழ்ப்பாணத்தில் மேலும் பல பிரதேசங்கள் மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிப்பு – மீள்குடியமர வேண்டியவர்களின் விவரம் மீளாய்வு

உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விவரங்களை இற்றைப்படுத்தும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் மேலதிக மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் வேறு இடங்களில் வசித்து வரும் குடும்பங்களின் விவரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. பல்வேறு பிரதேசங்கள் மீள்குடிமர்த்துவதற்கு...

கொரோனா வைரஸினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 11 பெண்களும் 29 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 68 ஆயிரத்து 676...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேர் கைது!!

சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடனடியாக மீள பெறுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பத்தரமுல்லை, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்பினர், பொது மக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டு குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தினர். எனினும்,...

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் – அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து அரசாங்கம் விளக்கம்

உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவுவது குறித்து உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் எந்த தகவலும் வரவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள இலங்கை குறித்த புதுப்பிக்கப்பட்ட பயண...

பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி யாழில் விசேட பூஜை வழிபாடு!

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தது கூட்டமைப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton-இற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்...

மஹிந்தவின் அமைச்சு பசில் வசம்! மஹிந்தவுக்கு புதிய அமைச்சு!!

நிதி அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முல்லைத்தீவு சென்று தாக்குதல் நடத்திய ஆவாவின் 6 பேர் யாழில் கைது!!

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும் காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச்...

காவல்துறை உத்தியோகஸ்தரின் பதிவு திருமணத்தில் கலந்து கொண்ட 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர். கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே – 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. அந்நிலையில் மாப்பிள்ளை...

நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் உத்தரவில் மாற்றம்!!

உள்வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் திருத்தியுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தற்போதுள்ள உத்தரவுகள் திருத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் தர்மதாசா தெரிவித்தார். அதன்படி கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, 14 நாட்களுக்குப் பிறகு நாட்டிற்கு வருபவர்கள், விமான நிலையத்தை வந்தடைந்ததும் மேற்கொள்ளப்படும்...

மண்டைதீவில் மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு பின்பக்கமாக உள்ள காணியில் நேற்று (புதன்கிழமை) காலை, விறகு எடுப்பதற்காகச் சென்ற கிராமவாசிகள் குறித்த கைக்குண்டுகளைக் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,...

வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தினாரல் கொல்லப்பட்டவருக்கு நீதிகோரியவர்கள் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் இன்றைய தினம்(புதன்கழமை) மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின், இல்லத்திற்கு முன்பாக இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனுக்கான நீதி வேண்டி இன்றைய தினம் அவரது பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மட்டக்களப்பு காந்திப்...

பரிசோதனை வெற்றி – கொரோனாவுக்கு சிகிச்சை முறை கண்டுபிடிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸூக்கு எதிராக பல தடுப்பூசிகள் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். குறிப்பாக தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை அளித்தால் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்....

இலங்கை – சீனா இராஜதந்திர உறவுகளின் 65 ஆண்டுகள் பூர்த்தி நினைவு நாணயம் வெளியீடு!!

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு,மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய்கள் நாணயத்தினை,இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன் அவர்கள், நேற்று பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் வழங்கி வைத்தார். இந்த...

வயதுக் கட்டுப்பாடின்றி சகல ஆசிரியர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் திங்களன்று ஆரம்பம்!

நாட்டில் முன்னுரிமை தொழில் படையாக பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட்- 19 தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நாடுமுழுவதும் பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியில் வயதுக் கட்டுப்பாடின்றி அனைத்து...

வடக்கில் 3 மாவட்டங்களில் இராணுவத்தினருக்கு நேரடியாகக் கிடைக்கப் பெற்ற தடுப்பூசி டோஸ்களே மக்களுக்கு வழங்கப்படுகின்றன

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அவர்களுக்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற கோவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வட மாகாணத்தில் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தேற்றல் திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக, நான் குறிப்பிட்டதாக...

இருமாதகாலத்தின் பின்னர் டெல்டா வைரசின் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

உலகின் அநேகமான நாடுகளில் கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் பரவ ஆரம்பித்து 2 - 3 மாதகாலத்தின் பின்னரே அதன் மோசமான தாக்கங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. எனவே தற்போது எமது நாட்டிலும் டெல்டா வைரஸ் திரிபுகள் இனங்காணப்பட்டுவரும் நிலையில், இருமாதகாலத்தின் பின்னர் இதன் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...
Loading posts...

All posts loaded

No more posts