Ad Widget

கொரோனா வைரஸினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, 11 பெண்களும் 29 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 68 ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 2 இலட்சத்து 39 ஆயிரத்து 584 பேர் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts