Ad Widget

யாழில் தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்கள்- தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடிகாமம் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

கொடிகாமம்- கெற்பேலி பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் புகுந்த குழுவொன்று, வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் வீட்டின் மீதும் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த கொடிகாம பொலிஸார் வீட்டில் இருந்தோரிடம் முறைப்பாட்டினை பெற்று அதனடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Related Posts