Ad Widget

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள்!!

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் வெளிமாட்ட மீனவர்கள் ஈடுப்படுவதாக வட மராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அனுமதிக்கப்படாத சுருக்கு வலைகள் மற்றும் வெளிச்சம் பாச்சி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பவதனால் தங்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சிறியளவில் முதலீடுகளை மேற்கொண்டு கடற்றொழிலையே தமது முழுமையான வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள கடற்றொழிலாளர்கள் இதனால் அதிகளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள வட மாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் தாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Posts