யாழில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதற்கமை யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவரே நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார் இவரின் சடலம், சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளதாக...

யாழில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் – மீசாலையிலும் வாள் வெட்டு!

மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(புதன்கிழமை) மீசாலை – புத்துார் சந்தியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்தில் பயணித்த குறித்த...
Ad Widget

மீசாலையில் விபத்து – தென்மராட்சியில் பல பகுதிகள் இருளில் மூழ்கியது!

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மீசாலை பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிசாரின் பேருந்துக்கு பின் பக்கமாக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது. அதனால் அருகில் இருந்த மின் கம்பம் சேதமடைந்து கொடிகாமம் , மீசாலை...

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் மேலும் இருவர் சாவு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93ஆக உயர்வடைந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில்...

வடக்கு – கிழக்கு மீள்குடியேற்றத்துக்கு அரசின் இணைப்பாளர் நியமனம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான அரசின் மீள்குடியேற்ற இணைப்பாளராக பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ச வழங்கிவைத்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கீதாநாத் காசிலிங்கம், 2019ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதிலிருந்து பிரமரின் இணைப்புச் செயலாளராக உள்ளார்.

யாழில் வன்முறைக்கும்பல் அட்டகாசம் : 4 பேர் படுகாயம் : சொத்துக்களுக்கு சேதம் !

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவமொன்றில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் கோண்டாவில் பகுதியில் உள்ள இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள செல்வபுரம் சிவன் கோவிலடியில் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது – மக்களுக்கு எச்சரிக்கை!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர். மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய...

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்று கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு நிலையத்தினை பார்வையிட்டார் கஜேந்திரன்!

கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று(செவ்வாய்கிழமை) பார்வையிட்டிருந்தனர். இதன்போது குறித்த கடலட்டை பண்ணையில் சீனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை. ஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான ஆதாரங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை...

யாழில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி!!

யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அது திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்த போது, 160 கோடி ரூபா...

ஆபத்து நீங்கவில்லை!! ஒரு புதிய எதிரி சுற்றித்திரிகிறான் – எச்சரிக்கும் வைத்தியர்கள்!

பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தாவிட்டால் இன்னும் 10 வாரங்களில் இலங்கையினுள் பரவும் பிரதான வகை கொவிட் வைரஸாக டெல்டா வைரஸ் திரிபு மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளை இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "60 வயதிற்கு...

கொக்குவிலில் வீடுகளுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அடாவடி!!

கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுபகுள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கிருந்த பெறுமதியான பொருளிகளை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். 6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து...

யாழில் கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு 100ஐ நெருங்கியது!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற நயினாதீவைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். அதேபோல், யாழ்ப்பாணம் – வெள்ளாந்தெரு பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணம்...

இணையவழிக் கற்றல் விருத்தி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை விருத்தி செய்வது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இணைய வழியில் கற்றலை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் துறைசார் தரப்பினரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த அதிகாரிகள் எதிர்கெபாள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்...

யாழில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்- இளைஞன் படுகாயம்

அளவெட்டி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த குழுவொன்று, அங்கிருந்த இளைஞன் மீது வாள் வெட்டுத்தாக்குதலை நடத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த இளைஞன், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். மேலும் இந்த வாள்வெட்டுக் குழு, வீட்டிலிருந்த பொருட்களையும் உடைத்து நொருக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக...

கொரோனா வைரஸின் டெல்டா தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம்

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த மூவரும் தற்போது கந்தக்காடு இடைத்தங்கல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் குறித்த மூவரும் கொழும்பு...

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை என சுமந்திரனால் கூறப்பட்ட நபர் சீன பிரஜை அல்ல!!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சீன பிரஜை ஒருவர் பருத்தித்துறை- மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக கூறிய நபர் சீன பிரஜை அல்ல. படத்தில் காட்டப்பட்டவர் அக்கரைப்பற்றை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் MOHOMAD MUSTAFA MOHOMAD HANIFA குடத்தனையில் தமிழ் பெண்ணை திருமணம் முடித்துள்ளார். அவரே அங்கு பணியில் உள்ளார். ( i Road project...

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம் ஒன்றுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிவிட்டுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில்...

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வலி.தென்மேற்கு பிரதேச சபை தலைவர் அ.ஜெபநேசன்,...

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...
Loading posts...

All posts loaded

No more posts