Ad Widget

கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினர் அரசியல் கைதிகளை பார்வையிட்டனர்!!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ,சட்ட ஆலோசகர் காண்டீபன் ஆகியோர் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கூறி உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் அமைச்சின் செயலாளருடன் தொலை பேசியில் தொடர்பை மேற்கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அரசியல் கைதிகளை தாங்கள் கட்டாயம் பார்வையிட்டு நிலைமைகளை கேட்டறிய வேண்டும் என கடுமையாக வலியுறுத்தியதை அடுத்து அமைச்சின் செயலாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் கஜேந்திரகுமார் உள்ளிட்ட குழுவினர் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது அரசியல் கைதிகளை சந்தித்த குழுவினர் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் உரிய தரப்புகளுக்கு இவ் விடயம் பற்றி அறிவித்து கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்தனர்

Related Posts