நவாலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!

நவாலி தேத்தா மரத்தடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக்குழு ரவுடிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. குறிந்த வாள்வெட்டு சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவு, யன்னல்களை உடைத்தும், வாளால் வெட்டியும் அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்தியுள்ளது. இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து...

நல்லூர் ஆலயத்தில் சீனத் தூதுவர் வழிபாடு!!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்து சமய முறைப்படி வேட்டி அணிந்து அவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்தனர். கோவிட்-19 சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் சீன அதிகாரிகள் வழிபாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.
Ad Widget

டிசம்பர் மாத இறுதி வரைக்கான சுகாதார வழிகாட்டி!!

கொவிட் தொற்றுக் காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமுலில் உள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளாது, டிசம்பர் மாத இறுதி வரை தொடர்வதற்கு தீர்மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். தற்போது நடைமுறையில்...

கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை ஏன் எடுக்க வேண்டும்?

ஒமிக்ரோன் வைரஸ் மாறுபாடு நாட்டில் பரவினால், அதன் விளைவுகளை குறைக்க கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகை எடுத்துக்கொள்வது அவசியமாகும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார். மூன்றாவது அலகை எடுத்துக்கொள்வதன் மூலம், கோவிட்-19 நோய்த்தொற்றின் இறப்பு மற்றும் சிக்கல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்

இலங்கைக்கு தெற்காக காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை...

யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் – கீ சென் ஹொங்

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “”முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளேன். இன்றைய...

யாழ்.மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது- கஜேந்திரகுமார்

யாழ்.மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், யாழ்.மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளதாவது, “எங்களுடைய அமைப்பு இந்த பாதீட்டை எதிர்க்கும்...

பண்டிகைக் காலத்தில் பயணத்தடை அமுல்படுத்தப்படுமா? – முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய, பயணத் தடையை அமுல்படுத்தாமல் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்தின்போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என...

நான்காவது தடுப்பூசியும் வழங்க வாய்ப்பு : தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை!

எதிர்காலத்தில் நான்காவது டோஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், கோவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். “தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதல்ல. ஒரு தரவுத்தளத்தில்...

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் மூச்சுத் திணறலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணிக்கு சேர்க்கப்பட்டார். எனினும் குடும்பப்பெண்...

இலங்கைக்கு தெற்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை!

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு தெற்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, இலங்கையின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை...

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 13 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு குறைவான ஆணொருவரும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய...

யாழில் விரிவுரையாளர் வீட்டில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- மனைவி காயம்

துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதினால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வழமை போன்று நேற்று காலை, விரிவுரையாளரின் மனைவி உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது,எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுள்ளது. இதன்போது வெடித்து சிதறிய...

இலங்கையில் சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 89 சிறுவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

இலங்கையில் இதுவரை சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்களும் 18 வயதுக்கு உட்பட்ட 89 குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக குடும்ப நலப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்தராமலி டி சில்வா தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கர்ப்பிணித் தாய்மார்களின் மரணங்கள் அனைத்தும்...

யாழில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 3ஆவது கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக...

சதொசக்களில் அரிசி, சீனி உள்ளிட்ட 50 வகை பொருட்கள் குறைந்த விலையில்!!

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரை அரிசி உள்ளிட்ட 50 அத்தியாவ சிய பொருட்களை சதொச மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தப்பொருட்கள் சந்தையில் விற்பனை...

அரச ஊழியர்களின் சம்பளத்தை 18,000 ரூபாவால் அதிகரிக்க வேண்டும்!!

அரசு சேவையாளர்களின் மாதாந்த சம்பளத்தை 18,000 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என ஒன்றிணைந்து இலங்கை அரச சேவையாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது. தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு நேற்ற (12) கல்முனையில் நடைபெற்றது இங்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அனைத்து...

அதிகாரப்பகிர்வை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் -எம்.ஏ.சுமந்திரன்

13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது,13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சுன்னாகத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் "தமிழர்தம் அபிலாசைகளில் சர்வதேச நாடுகளின் கரிசனை தொடர்பாக சாணக்கியர்களின் கருத்துப் பகிர்வு" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்விலேயே...

யாழ். இளைஞர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் குழுவிற்கு உயிர்காப்பு பயிற்சிப் பாடநெறி அண்மையில் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம், காரைநகரில் அமைந்துள்ள எலார கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று கலந்துகொண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படை சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, கடற்படையின் வடக்கு கடற்படைக் கட்டளையகம் 2021/01 மற்றும் 2021/02...

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் ஏற்படும் நோய் அறிகுறிகள் குறித்த அறிவிப்பு!

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என சிறப்பு மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்துள்ளார். ஃபைசர் மூன்றாவது டோஸை செலுத்தும்போது, ​​கொரோனா போன்ற சிறிய அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தோன்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உடல்வலி, தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்...
Loading posts...

All posts loaded

No more posts