Ad Widget

யாழ்.போதனாவில் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை இன்று (திங்கட்கிழமை) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நோயாளிகளுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts