Ad Widget

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற அமைச்சரவை இணங்கியது!!

நாட்டில் தற்போது டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களை இறக்குமதிசெய்வதில் பல்வேறு சிக்கல் நிலைதோற்றம் பெற்றுள்ளது.

இதனால் நாட்டு மக்கள் எரிபொருள், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தவற்கு நாள்தோறும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts