கைவிடப்படும் சிறுவர்கள் குடாநாட்டில் அதிகரிப்பு; 2012 இல் பெற்றோரைப் பிரிந்தவர்களின் எண்ணிக்கை 614

யாழ். மாவட்டத்தில், பெற்றோர்களால் கைவிடப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. கடந்த ஆண்டு, முன்னைய ஆண்டுகளைவிட அதிகளவில் அதிகரித்துள்ளது என்று யாழ். மாவட்ட செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

க.பொ.த சா/த, உ/த சித்தியடையாவிட்டாலும் பட்டப்படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு: கல்வி அமைச்சர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடையாத மாணவர்கள் 2013ஆம் ஆண்டில் பட்டப் படிப்பொன்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)
Ad Widget

தேசிய பாதுகாப்பு இணையத்தளம் முடக்கம்

இலங்கை அரசின் முக்கிய பரப்புரை இணையங்களில் ஒன்றான, தேசிய பாதுகாப்புக்காக ஊடகத் தகவல் மையத்தின் இணையத்தளம், “கேம்ஓவர்” என்று அறியப்பட்ட ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாகச் செயலிழந்துள்ளது. (more…)

யாழில் கைதான 44 பேரும் தொடர்ந்து பூஸா முகாமில்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை கைது செய்யப்பட்ட 47 பேரில் 44 பேர் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இந்தத் தகவலைத் தெரிவித்தார். (more…)

மக்கள் குடியமராத மயிலிட்டியில் படையினரின் யோக்கட் ஆலை

மக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பசுப்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். பல்கலை. மாணவர் விடயத்தில் இந்தியா இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை!- இந்திய துணைத்தூதர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடயம் தொடர்பில் இந்திய அரசு அமைதியான முறையில் இராஜதந்திர ரீதியில் சில நடவடிக்கைளை எடுத்துள்ளதாக யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ். மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

பாக்கு விரிகுடாவில் மீன்பிடி முரண்பாடு; கருத்தரங்கு யாழ்.பல்கலைக்கழகத்தில்

பாக்கு விரிகுடாவில் மீன்பிடித்துறை முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கட்டமைப்புக்கும் உணர்வூட்டலுக்குமான கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பூகோளவியல் பிரிவில் நடைபெறவிருக்கின்றது. (more…)

யாழ். பல்கலை.மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இணையத்தள மகஜர் போராட்டம் ஆரம்பம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சம உரிமை இயக்கத்தினால் இணையத்தள மகஜர் கையெழுத்திடல் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

வதிரி கொலை சந்தேக நபருக்கு பிணை

யாழ். வடமராட்சி வதிரி பகுதியில் நபர் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபருக்கு யாழ். மேல்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. (more…)

கெற்பேலியில் இராணுவ முகாம் அமைக்க அனுமதி

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கெற்பேலி பகுதியில் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கான அனுமதியினை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக சுமார் 64 பரப்பு காணியில் இராணுவ முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களிடமிருந்து 1,849,500 ரூபாய் வசூல்

யாழ். மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்த 392 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 1,849,500 ரூபா பாவணையாளர் அதிகார சபையினால் வசூலிக்கப்பட்டுள்ளதாக (more…)

யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஜெபரட்ணத்திற்கு பதவியுயர்வு

யாழ்.பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் சூசைப்பிள்ளை ஜெபரட்ணம் கொழும்பு தலைமைக் காரியாலயத்திற்கு திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அத்தியட்சராக பதவியுயர்வு பெற்று செல்கின்றதாக யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சக அலுவலர்கள் தெரிவித்தனர். (more…)

தமிழ் அரசியல்வாதிகளை பழிவாங்குவது அரசாங்கத்திற்கு புதிதில்லை: சிவாஜிலிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களும் அரசியல் பழிவாங்கும் செயல்' என தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

யாழ் தேவி செப்டெம்பர் மாதம் யாழிலிருந்து கொழும்பிற்கு புறப்படும் இந்தியத் துணைத்துாதுவர்

கொழும்புடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் யாழ்.தேவி புகையிரதச் சேவையானது இந்த வருடம் செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வந்தடையும் என இந்தியத் துணைத்துாதுவர் கூறியுள்ளார். காங்கேசன்துறை முதல் ஓமந்தை வரையான புகையிரதப்பாதை அமைக்கும் பணிகள் முடிவடையும் தருணத்தில் உள்ளன.எனவே இவ்வருடம் யாழ்தேவியில் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்ல முடியும் என்றார்.

வாழ்வின் எழுச்சி திட்டம் தொடர்பில் ஒரு நாள் செயலமர்வு

வாழ்வின் எழுச்சித்திட்டம் தொடர்பில் பிரதேச மட்டத்தில் அலுவலர்களையும் கிராம மக்களையும் அறிவுறுத்தும் ஒரு நாள் செயலமர்வில் இன்று புதன்கிழமை நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (more…)

இருநாட்டு மீனவ சமாசங்களும் கலந்துரையாடி தீர்வுகாண வேண்டும்; இந்திய துணைத்தூதுவர்

இரு நாட்டு மீனவர் பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்பதே எமது விருப்பம். இதற்காக இருநாட்டு மீனவர்களும் கூடி கதைத்து ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்' என்று யாழ் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

144 சிறுவர்களுக்கு மருத்துவ உதவி தேவை; யாழ். செயலக அறிக்கை கூறுகிறது

யாழ்.மாவட்டத்தில் 144 சிறுவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக யாழ்.மாவட்ட செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

முதியோருக்கான 1000 ரூபா கொடுப்பனவு 23 ஆம் திகதி

தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜனவரி மாதத்துக்குரிய ஆயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் தரம் 06 அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்

கடந்த வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை, பிரபல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளள. (more…)

யாழில் போதை பொருள் தொடர்பான வழக்குகளில் சுமார் 16 லட்சம் ரூபாய் வசூல்

யாழ். மதுவரி நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 601 மதுபான வழக்குகளினூடாக 16,64,300 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக மதுவரி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.செந்தூர்செல்வன் நேற்று தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts