- Thursday
- March 12th, 2026
க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் தென்மராட்சி பிரதேச மாணவர்களுக்கான செயலமர்வு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நேற்று ஆரம்பமானது. (more…)
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கத்தின் வலையமைப்பின் மூன்றாம் கட்ட அமுலாக்கம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப்பட்டறையை கோப்பாயிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவன பயிற்சி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. (more…)
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் அலுவலகமொன்று இன்று வியாழக்கிழமை யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)
தமிழ் மக்கள், பிரிவினைவாதிகளுக்கு துணைபோகாது தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவிலிருந்து சட்ட விரோதமாக திருடிச் செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்துக் குளிகைகள் தொகுதிகள் பாதுகாப்பு ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளன. (more…)
யாழ். மாவட்டத்தில் உள்ள கள்ளுத் தவறணைகளை மூடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துவருவதால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொழிலை இழக்கும் அபாயமான நிலை தோன்றியுள்ளது என சீவல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். (more…)
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அடுத்த சில தினங்களில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். (more…)
யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் இன்று பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளராக அன்னலிங்கம் பிரேம் சங்கர் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)
"மகிந்தோதைய"த் திட்டத்தின் கீழ் யாழ். வரணி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது. (more…)
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஜூலை 25ம் திகதி முதல் (more…)
வடக்கில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 300 வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்றய தினம் நடைபெற்ற டிப்ளோமா ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. (more…)
இலங்கை 17 வயதுப் பிரிவு துடுப்பாட்ட அணி விபரம் கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. (more…)
இனந்தெரியாத நபர்களினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
கடந்த மூன்று நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் கைவிடப்பட்டுள்ளது. (more…)
காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 15 வர்த்தகர்களுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி நவரட்ணம் சிவசீலன் தெரிவித்தார். (more…)
கிணற்றில் வீழ்ந்து ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் தாவடியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. (more…)
கோண்டாவில், வைரவர் கோவிலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற திருவிழாவின் போது 15 பவுண் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் பெண்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
