Ad Widget

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஹேக் பதவி விலகினார்

பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். (more…)

எகிப்தின் போர்நிறுத்த யோசனை: இஸ்ரேல் ஒப்புதல், ஹமாஸ் நிராகரிப்பு

காசாவிலுள்ள பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸுடன் கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்துள்ள யோசனையை பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இஸ்ரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. (more…)
Ad Widget

வன்னேரிக்குளத்தை பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்த தீர்மானம்

வடமாகாண சபைக்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியை பறவைகள் சரணாலயப் பிரதேசமென சட்டபூர்வமாக பிரகடனப்படுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)

கொழும்பு செல்லும் வடமராட்சி மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த போதிலும் கொழும்பு உட்பட தென்பகுதிக்கு சென்று வரும் பயணிகளில் மாதாந்தம் சுமார் 10 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு வருவதாக பருத்தித்துறை கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (more…)

எதிர்வரும் 05 இல் 13வது அமர்வு, அவைத்தலைவர் அறிவிப்பு

வடக்கு மாகாண சபையின் 13வது அமர்வு ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். (more…)

யாழ். மீனவர் பேரவை ஆர்ப்பாட்டத்துக்கு தடை! அடுத்து என்ன?

தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அப்பேரவையின் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது. (more…)

இலங்கைக்கு எதிரான ஐநா விசாரணை இன்று முதல் ஆரம்பம்!

இலங்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழு இன்று (15) உத்தியோகபூர்வமாக தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. (more…)

ஜனாதிபதியை வடக்கு மக்கள் நம்பமாட்டார்கள் – சர்வேஸ்வரன்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வடமாகாண மக்கள் இனியொரு காலமும் நம்பமாட்டார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலை விரிவுரையாளர் நியமனம் முறைகேட்டை எதிர்த்து மனு தாக்கல்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட உதவி விரிவுரையாளர் நியமனத்தை இடைநிறுத்தக் கோரியும், இரத்துச் செய்யக் கோரியும், உயர்நீதிமன்றில் அடிப்படை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ்.குடாநாடு முழுதும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படும் – கஜதீபன்

வடக்கில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் அணி திரண்டு போராடாவிட்டால் யாழ்.குடாநாடு முழுவதையும் இராணுவத்தினர் தமது தேவைகளுக்கு என சுவீகரித்து விடுவார்கள் என்று வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். (more…)

வடமாகாண நிர்வாகத்துக்கு பிரதம நீதியரசர் அறிவுரை

வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் மாகாணத்தின் நல்லாட்சியை மனதில் கொண்டு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் வழியாக, நட்புறவு ரீதியாக இணைந்து வேலைசெய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கோரியுள்ளது. (more…)

அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்குமாறு முதலமைச்சர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி மஹிந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு (more…)

ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான் நடிக்கிறார்களா?

ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் ‘லிங்கா’ திரைப்படத்தில் இளையதிலகம் பிரபு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. (more…)

“காணிகளை துப்புரவு செய்து நாமாகவே குடியேறுவோம்”, கீரிமலை மக்கள் படையினரிடம் தெரிவிப்பு

கடற்படைத் தேவைக்காக சுவீகரிப்புச் செய்யப்படவுள்ள தமது காணிகளை துப்புரவுசெய்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு தாம் குடியமரப் போகின்றோம் என்று காணி உரிமையாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர். (more…)

அனாவசிய அண்டிபயாடிக்: மக்களின் உடல்நலம் பாதிப்பதாக புதிய ஆய்வு காட்டுகிறது

தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு மருந்துகளான அண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு உலகில் அதிகரித்துவருவதாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. (more…)

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான வீதி ஓட்டப் போட்டியில் யாழ்.பல்கலை அணி மூன்றாமிடம்

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட வீதி ஓட்டப் போட்டியில் யாழ்.பல்கலைக்கழக அணி முதல் முறையாகக் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. (more…)

யாழ். பல்கலை பீடங்களை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்தியா 600 மில்லியன் ரூபா நிதியுதவி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது. (more…)

சந்திரசிறி மீள் நியமனம்: ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது! – சம்பந்தன் சீற்றம்

"வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்துள்ளார். (more…)

இராணுவ ஆட்சியை நிலை நிறுத்தவே ஆளுநருக்கு பதவி நீடிப்பு – சுரேஷ்

"வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து நிலைநாட்டுவதற்காகவே ஆளுநர் சந்திரசிறியின் பதவியை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் (more…)

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

ஏழாலைப் பகுதியில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts