Ad Widget

பிரதேச சபை பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு

கரவெட்டி தெற்கு, மேற்கு பிரதேச சபையை சேர்ந்த 32 பணியாளர்களுகளுக்கான நிரந்தர நியமன கடிதங்கள், பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை(15) வழங்கப்பட்டுள்ளன.

பிரதேச சபை தவிசாளர் பொ.வியாகேசு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்த நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மின் இணைப்பாளர் 1, சாரதி 3, நீர் குழாய் இணைப்பாளர் 1, ஆயூள்வேத மருந்தாளர்1, நூலக பொறுப்பாளர் 1 மற்றும் 25 சுகாதார தொழிலாளர்கள் ஆகியோருக்கான நியமன கடிதங்களே வழங்கப்பட்டன.

நியமன கடிதங்களை தவிசாளர், சபை செயலாளர்,உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைத்தார்கள்.

Related Posts