- Thursday
- March 26th, 2026
மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, அந்நாட்டு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகேவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இதன்போது, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய பாதையை தொடங்குவதன் மூலம் இந்தியா-இலங்கை...
மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும்...
உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது....
சாவகச்சேரியில் வீதியோரத்தில் இருந்த நிலையில் இடித்தழிக்கப்பட்ட குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபியை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வீதியில் இருந்து 4 அடிகள் தூரத்திலும், தனியார் காணியின் எல்லைக்கு வெளியே குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி இருந்தது. தனது...
“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்துகொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “ஆனந்தன்” என்பவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “ஆனந்தன்” என்பவர் வழங்கிய தகவலுக்கமைய...
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடற்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாகவே ஞாயிற்றுக்கிழமை (26) முதல் சேவை இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. படகுச் சேவை வழங்குநர் நிறுவனம், மோசமான வானிலை முன்னறிவிப்பைக் காரணம் காட்டி, நேற்று முதல் நாளை செவ்வாய்கிழமை வரையிலான பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக...
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சிறிய ரக கத்தியுடன் கைதான இளைஞனை 24 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை ஐஸ் மற்றும் சிறிய ரக கத்தியுடன் யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கைது...
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு படகினை கண்டுபிடித்துள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது இந்த படகு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் படகு, பிரியங்கா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது 400...
வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் விநியோகித்தில் இராணுவத்திற்கு மிகப்பெரிய பங்குள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சியை தோற்கடிப்பதற்காக இராணுவத்தினரால் வடக்கு,கிழக்கில் பரப்பப்பட்ட போதைப்பொருள் புற்றுநோய் இன்று தெற்கிலும் வியாபித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் இராணுவத்தினரை இது தொடர்பான நடவடிக்கையில் இருந்து முற்று முழுதாக நீக்கி விடுங்கள் என தமிழ்த் தேசிய...
யாழ் பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ்பாணம் மவட்டத்தின் உரிமைகள் பதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் முன்னெடுத்த ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த குறித்த சங்கத்தின் தலைவர் PTJ ஜசோதன் மேலும் கூறுகையில் - யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் காணப்படும் கல்வி சாரா...
நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இந்த இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து படகுச் சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதுடன், சமூக, சமய மற்றும் நிர்வாக ரீதியாக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது....
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் , அச்சுவேலி பொலிஸ் நிலையங்களில் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் இரு இளைஞர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அதேவேளை , வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் யாழ்ப்பாண கிளையிலும் இளைஞர்கள் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் அதற்கான ஆலோசனைகளை வழங்குவதாகவும்...
பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து புதன்கிழமை (22) சூரன் என்ற இளைஞன் யாழ்ப்பணத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு...
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை வியாபாரி உள்ளிட்ட இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 20 வயதுடைய போதை மாத்திரை வியாபாரியை கைது செய்ததுடன் , வியாபாரியிடம் மாத்திரைகளை வாங்க...
இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த அமைப்பு இன்று (22) மாலையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது....
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்டு மக்களின் அவசர அழைப்புகளிற்கு உடன் அணுகலை வழங்கிப் பொதுமக்கள் மற்றும் பொதுச்சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட பொலிஸ் சேவை யாழ்மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியேட்சகர் (SSP) ஜெ.பி.எஸ். ஜெயமகா, யாழ்மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியேட்சகர் (ASP) கே. ஏ. ஈ. என். டில்றுக் ஆகியோரின் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்ப்பாண...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி...
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்துள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக இன்றையதினம் (21) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம்...
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் எந்திரி எஸ்.பிரபாகரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வவுனியா – மன்னார் 220 கிலோ...
சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் அதிலிருந்து தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி - சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார். இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத...
Loading posts...
All posts loaded
No more posts
