- Wednesday
- May 1st, 2024
இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சருமான வி கே சிங் விமர்சித்துள்ளார். இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது என்ற முடிவு இராணுவ மட்டத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே...
மே ஒன்றாம் தேதி கமலுக்கு மட்டுமின்றி ஸ்ருதிக்கும் முக்கியமான நாள். அன்று கமல் நடித்த உத்தம வில்லனும், ஸ்ருதி நடித்துள்ள கப்பார் இஸ் பேக்கும் திரைக்கு வருகின்றன. தந்தை, மகளின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது அபூர்வம். அது மே ஒன்று நடக்கயிருக்கிறது. கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லன் மே 1 திரைக்கு...
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள ‘காஞ்சனா–2’ தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. இந்த படம் நாளை ரிலீசாகிறது. காஞ்சனா படம் ஏற்கனவே ஹிட்டானதால் 2–ம் பாகமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் ‘லாரன்ஸ்’ 70 வயது கிழவியாக நடித்து படங்கள் ஏற்கனவே வெளிவந்தன. இது தவிர 7 வயது...
புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில் சோமாவதி புனித பூமியில்புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) சோமாவதி புனித பூவியில் நடைபெற்றது. அறுவடை செய்யப்பட்ட புது அரிசியின் முதற்பகுதியை புத்தபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. அடுத்த விளைச்சல் செழிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பூஜை செய்யப்பட்டது. விவசாயிகளுடன் அந்நிகழ்வில் கலந்து...
இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு என இந்திய அரசால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து பயில்வோர் வடமாகாணத்தில் குறைவாகவே உள்ளதாக இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மலரட்டும் புதுவசந்தம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இந்திய அரசால்...
முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது. பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம்....
இன்று (15) வடக்கின் அனலைதீவு-யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுவெளி ஆகிய பிரதேசங்களில் நன்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 5ஆம் திகதி தொடக்கம் இன்று வரை (15) சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிலவேளைகளில் கடுங்காற்றுடன் கூடிய இடி மின்னல் ஏற்படக்கூடிய...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் யாழ்.மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர்கள் ஒன்றியத்தினால் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் ஜே.கே நிறுவனமும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனமும் இணைந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளவும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கலந்துரையாடலின்...
கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள தனது 7 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. அதனை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்....
இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ளும் வசதி நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘On-arrival visa’ அதாவது...
யாழில் உள்ள உணவகங்களில் 90 வீதமான உணவகங்கள் உணவகம் ஒன்றுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவில்லை என யாழ்.மாநகர சபையின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ் உணவகங்களில் கழிவகற்றும் பாதை, உணவுப் பொருட்கள் வைக்கும் இடம், சமையலறை, களஞ்சியம் என்பன சீரான முறையில் காணப்படவில்லை அல்லது அமைக்கப்படாமையே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். யாழ்.மாவட்டத்தில் உணவு சம்பந்தமான...
திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விடவும் சிறிய அளவிலான விதிகளையே புதிய அரசாங்கம் அமைத்து வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அம்பாந்தோட்டை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதை நிர்மாணப் பணிகளுக் காக பயன்படுத்தப்படுகின்ற கொங்கிரீற் கற்படிகளின் தடிப்புகளை குறைத்தும் செலவை குறைத்தும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,...
இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மிகப் பெரிய அளவிலான துஸ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை ஆராயும் பொருட்டு, பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பல குழுக்களின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. அத்துடன் அரசால் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்கவோ அல்லது அவ்வாறான சூழல் மீண்டும் ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்யும்...
சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தில் அக்கறையற்ற போக்கினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தற்போது இந்த விவகாரத்தில் அரசியல் கலந்திருப்பதாகக் கூறி, மக்களை ஏமாற்றப் பார்க்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும்...
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் மாத்திரம் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரிவின் ஊடகப் பேச்சாளர், பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். போலி பேஸ்புக் கணக்கு குறித்தே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஏனையவர்களின் கணக்குகளை முடக்கி தரவுகளை மாற்றியமை...
லிபியா அருகே நிகழ்ந்த படகு விபத்தில் சுமார் 400 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு சண்டையை அடுத்து திருட்டு தனமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லிபியா பகுதியில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றில்...
ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு தமிழில் தகுதியான நடிகர், எனக்கு எந்த பட்டமும் தேவையில்லை என்று சொல்லி தனக்கு ரசிகர்கள் கொடுத்த ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தை துறந்தவர், இளம் பெண்களைக் கவர்ந்திழுக்கும் புன்னகைக்கு சொந்தக்காரர் என்ற பன்முகத்துக்கு பெயர்போன அஜித்துக்கு ‘தல’ என்கிற வைர கிரீடத்தில் மேலும் ஒரு இறகு சேர்ந்துள்ளது. ஐடைம்ஸ் என்ற இணையதளம்...
கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ வருகிற மே 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்நிலையில், இப்படம் வெளியாவதில் சில பிரச்சினைகள் எழுந்தன. திட்டமிட்டபடி படம் வெளிவருமா? என்ற சந்தேகமும் எழுந்தது. இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக தமிழ் திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பாக தயாரிப்பாளர்...
புதியதொரு அரசியல் கலாசாரத்திற்குள் நுழைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இன, மத, கட்சி பேதங்களை புறந்தள்ளிவிட்டு இலங்கை சமூகம் என்ற உணர்வுடன் வருங்காலத்தை எதிர்பார்த்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில் அழுத்தங்கள் மற்றும் கட்டுப்பாட்டு உணர்வுகளில் இருந்து மீண்டு புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமையானது மிக முக்கியமான விடயமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....
இலங்கையில் இடம்பெற்ற மனித நேயத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தொழிற்கட்சியின் தலைவர் டேவிட் மிலிபான்ட் கோரியுள்ளார். தமிழ் புது வருடத்துக்காக வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகள் உட்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும்...
Loading posts...
All posts loaded
No more posts