Ad Widget

தீவுப்பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கடற்படையினர் கொண்டுசெல்வர்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்கும் தீவுப்பகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், கடற்படையினரின் பாதுகாப்புடன் அவர்களின் படகுகள் மூலம் கொண்டு செல்லப்படும் என யாழ். மாவட்ட செயலரும் தெரிவித்தாட்சி அலுவலருமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

‘எதிர்வரும் 16ஆம் திகதி காலை முதல் வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளுக்கு கடற்படையினரின் உதவியுடன் அவர்களின் படகுகளில் எடுத்துச் செல்லப்படும்.

வாக்களிப்பு முடிவடைந்ததும், அதேபோல் மீண்டும் கொண்டு வரப்படுவதுடன் நெடுந்தீவு வாக்குப் பெட்டிகள் விமானப்படையினரின் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு வரப்படும்’ என்றார்.

Related Posts