Ad Widget

வேகமாக வாகனம் செலுத்துபவர்கள் இனி சிக்குவர்! வேகத்தைக் கணிக்கும் ‘ராடர்’கள் யாழ். பொலிஸாரிடம்!!

வாகனங்களின் வேகத்தைக் கணிக்கும் 'ராடர்' கருவி பொலிஸ் திணைக்களத்தால் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழப்பாணத்தில் வேகமாக வாகனங்களை செலுத்துவதால் இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ராடர் கருவி இலங்கையில் பல வருடங்களுக்கு முன்னரே அறிமுகமான போதிலும் யாழ். மாவட்டத்தில் நேற்றுப் புதன்கிழமையே இது அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில்...

மாணவிகளுக்கு இடையூறு விளைவித்த 23 இளைஞர்கள் கைது

நெல்லியடி பகுதியில் வீதிகளில் நின்றுகொண்டு பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்றுவரும் மாணவிகளிடம் சேஷ்டை செய்த 23 இளைஞர்களைக் புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜஃவ்பர் தெரிவித்தார். பின்னர், கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் இளைஞர்கள்...
Ad Widget

பிரதேச செயலக பணியாளர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

கரவெட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவர், புதன்கிழமை (17) மதியம் கோவில் சந்திப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் உதயகுமார் (வயது 30) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகினார். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவரை, நெல்லியடி...

பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கண்டித்தும் அதனை தடுக்கும் வகையிலும் பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சைக்கிள் ரோந்து சேவையை யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் ஆரம்பித்து வைத்தார். குறித்த சேவையினூடாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாகவும்,போதைப் பொருட்களை மாணவர்கள் மத்தியில் விநியோகிப்பவர்களை மறைமுகமாக கண்டுபிடிக்கவும், சட்டவிரோத மதுபான விற்பனை...

வல்லையில் விபத்து; தளத்தில் ஒருவர் சாவு

வல்லைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் சாவடைந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து வல்லை நோக்கி அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஒரத்தில் இருந்த பூச்சாடியை மோதித்...

ரஜினியுடன் இணையும் பிரகாஷ்ராஜ்!

ஐ லவ் யூ செல்லம் என்ற வார்த்தையை தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலக்கச் செய்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். கில்லி படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணமான பிரகாஷ் ராஜை தற்போது தமிழில் அதிக படங்களில் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் சிறிது காலம் காணாமல் போயிருந்த பிரகாஷ் மீண்டும் கமலின் தூங்கா வனம் படத்தின் மூலம்...

பக்திப்பழமாய் காட்சி தரும் சிம்பு…

சிம்பு நடித்துள்ள கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் விபூதி பட்டை போட்டு நடுவே குங்குமம் வைத்து பக்திப்பழமாய் காட்சித்தருகிறார் சிம்பு. இந்த போஸ்டர் டிவிட்டரில் டிரெண்ட் ஆனதோடு நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளது. சிம்பு தனது படங்களில் எப்போதுமே ஸ்டைலிஸ் ஆகவே காட்சி தருவார். ஆனால் செல்வராகவன் இயக்கத்தில் கான்...

விதிமுறைகளை மீறி இயங்கும் மதுபானசாலைகளை மூடுவதுடன், புதிய அனுமதிகளையும் நிறத்துக

வடக்கு மாகாணத்தில் விதிமுறைகளை மீறி இயங்கும் மதுபானசாலைகளை மூடுவதுடன், புதிய அனுமதிகளை வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதானது ‘ யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு அதிகரித்துக் காணப்படும் மதுபான...

மாணவனின் அந்தரங்க உறுப்பில் உதைத்த ஆசிரியருக்கு பிணை

வரணி மத்திய கல்லூரியில் தரம் 10இல் கல்விகற்கும் மாணவனை காலால் உதைத்து அந்தரங்க உறுப்பை காயப்படுத்திய ஆசிரியரை 1 இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (17) அனுமதியளித்தார். மாணவர் பிழை செய்யும் போது அதனை பெற்றோருக்குத் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இவ்வாறு கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடாது...

வீதியில் ஆயுதங்களுடன் திரிந்தவர்களுடன் பல்கலை. மாணவனுக்கு என்ன வேலை? நீதிபதி கேள்வி!

வீதியில் பெற்றோல் குண்டுகள், கோடரிப்பிடிகள், பொல்லுகள் போன்ற ஆயுதங்களுடன் திரிந்தவர்களுடன் பல்கலைக்கழக மாணவனுக்கு என்ன வேலை? இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதி இளஞ்செழியன் கேள்வி அவருக்குப் பிணை வழங்கவும் மறுப்புத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பெற்றோல் குண்டுகள், கோடரி பிடிகள், பொல்லுகள் சகிதம் கைதான 10...

கல்வி விசா மூலம் ஆட்கடத்தல் மோசடி

கல்வி விசா பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார். வெவ்வேறு ஊடகங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி விசாவின் மூலம் சென்று அங்கு பகுதிநேர தொழிலில் ஈடுபடலாம் எனத் தெரிவித்து இளைஞர், யுவதிகளிடம் அதிக...

பருப்பு இறக்குமதி வரி குறைப்பு எண்ணெய் இறக்குமதி வரி ஏற்றம்!

இறக்குமதி செய்யப்படும் மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் பருப்பு ஆகியவற்றுக்கான இறக்குமதி விசேட விற்பனை பொருள் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பருப்பு வகைகளுக்கு அறவிடப்பட்ட வரி கிலோ ஒன்றுக்கு 5 ரூபாவில் இருந்து 25 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. உலக சந்தையில் பருப்பு விலை அதிகரிக்கும் போது தேசிய வியாபாரிகளுக்கு அநீதி...

பிறை தென்படவில்லை புனித நோன்பு வௌ்ளியன்று ஆரம்பம்!

புனித ரமழான் நோன்பு எதிர்வரும் 19ம் திகதி வௌ்ளிக்கிமையில் இருந்து ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. நேற்றய தினம் நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்கும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம்: கூட்டமைப்பு கவலை

இலங்கையின் புங்குடு தீவைச் சேர்ந்த மாணவி வித்யாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேரையும் காவல்துறையினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விசாரித்து வருவது குறித்து சுரேஸ் பிரமச்சந்திரன் கேள்வியெழுப்பியிருக்கிறார். சாதாரண வழக்குகளுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியிருக்கிறார். வித்யா கொலை தொடர்பான விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை, பயங்கரவாதத்...

ரோந்து நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

யாழ்ப்பாணத்தின் சில முக்கிய பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மது பாவனையின் அளவு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக குற்றச்செயல்களில் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. இந்த நிலையில் யாழில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு...

உயிருக்கு அச்சுறுத்தல்; கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரை அச்சுறுத்தியமை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான் நகர் கிராமத்தில் புகையிரத வீதி, மற்றும் ஏ9 வீதி புனரமைக்கப்பட்டதன் பின்னர் கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குடியிருப்பு வீதிகள் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் சேதமடைந்து...

முன்னாள் போராளிகள், மாவீரர்கள் தொடர்பில் தரவு சேகரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன

புனர்வாழ்வு அளிக்கப்பட முன்னாள் போராளிகள், தடுப்பிலுள்ள போராளிகளின் குடும்பங்கள், மாவீரர்களின் குடும்பங்கள் ஆகியோருக்கு உதவி வழங்கும் திட்டத்துக்காக தரவு சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வடமாகாண மீன்பிடி, வர்த்தக வாணிப மற்றும் கிராமி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், புதன்கிழமை (17) தெரிவித்தார். சேகரிக்கப்பட்ட தரவுகளை முன்னுரிமை அடிப்படையில் உதவிகள் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர்...

வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவரின் நாக்கை கடித்து துப்பிய மாணவி

பாடசாலை முடிந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற பஸ் சாரதியொருவருக்கு, வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனையொன்றை குறித்த மாணவி வழங்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மேற்படி மாணவி, பாடசாலை முடிந்து தனிமையில் வந்துகொண்டிருந்த போது, மேற்படி சாரதியும் மோட்டார்...

குடிநீர் போத்தல்கள் பரிசோதனைக்கு

சிறுநீரக நோய் அதிகளவில் பரவும் வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களின் தரங்களை பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நுகர்வோர் அதிகார சபை மேற்கொண்டுள்ளது. குறித்த குடிநீர் போத்தல்களின் தரம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை முன்வைத்த முறைப்பாடுகளுக்கு இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தநிலையில், குறித்த மாகாணங்களின் விற்பனை செய்யப்படும்...

யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவு கூரும் தினம் பலாலியில்!

யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவு கூரும் தினம் இன்று புதன்கிழமை பலாலி இராணுவத் தளத்தில் ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பலாலி படைத்தளதில் அமைந்துள்ள படையினரின் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் பளிஹக்கார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரசாங்க அதிபர்கள், இந்தியத் துணைத்தூதர்...
Loading posts...

All posts loaded

No more posts