- Thursday
- May 14th, 2026
கம்பஹா கொட்டதெனியா பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சேயா கொலை வழக்கு இன்று (திங்கட்கிழமை) மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார். அத்துடன், கொலையுடன் தொடர்புடைய கொண்டயாவின் அண்ணனை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில்...
போரின் இறுதி மாதத்தில் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கலாம் என சில மதிப்பீடுகள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் இறந்தவர்கள் தொடர்பான உறுதியான கணிப்பீடுகள் கிடைத்திருக்கவில்லை எனவும் நினைத்ததிலும் பார்க்க குறைவான மரணங்களே இடம்பெற்றிருக்கக்கூடுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ' ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போதே...
யாழ்.மாவட்டத்தில் உயர் கல்வியை வழங்கும் நிறுவனங்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு 7 வகையான அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்மொழிந்து அந்தச் செயற்றிட்டங்களை மேற்கொள்ள 2,375 மில்லியன் ரூபாய் நிதி தேவையென, யாழ்.மாவட்டச் செயலகத்தால் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்திடம் கோரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் உயர் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியன யாழ்ப்பாணத்தில் உயர்கல்வியை வழங்கும் நிறுவனங்களாக இருக்கின்றன. இவை...
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991ம் ஆண்டு முதல் தன்னை இணைதுக் கொண்ட்வர் சிவகாமி. அனைவராலும் தமிழினி என்று அறியப்பட்டவர். புலிகளின் அரசியல் துறை , மற்றும் மகளீர் அணிப் பொறுப்பாளராகவும் அவர் கடமையாற்றி இருந்தார். 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் யுத்தத்தி தோல்வியைத தழுவிய சமயத்தில் , மக்களோடு மக்களாக அவர் சென்று...
மறநை்த முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அவர்களது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தமிழ் மக்களது அரசியல் விடுதலைக்கான பயணத்தில் தனது 19வது வயதில் தன்னை இணைத்துக் கொண்ட சிவகாமி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட தமிழினி அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கணம் வரை மக்களின்அரசியல்...
இலங்கைக்கு புதிய ரக போர் விமானங்களை வழங்க இந்தியாவும் முன்வந்துள்ளது. இலங்கை விமானப்படைத் தளபதி பாகிஸ்தான் செல்லவுள்ளார் என்றும் அவர் பாகிஸ்தானின் ஜேஎப்-17 சுப்பர்சொனிக் விமான கொள்வனவு தொடர்பில் பேச்சு நடத்துவார் என்றும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து இந்தியா, தமது விமானங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கையிடம் கேட்டுள்ளதாக விமானப்படை தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இலங்கை விமானப்படை...
வடமாகாண சபை மூலம், மக்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது, அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது, மற்றும் வடமாகாண சபையின் சமூகமான செயற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், வடமாகாண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்...
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பினால் இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வடக்கு மாகாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமானது அம்மக்களை தொடர்ச்சியாக 25 வருடங்கள் மிகுந்த...
போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படத்துக்கு மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளமை தொடர்பில், பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட இயங்குநரொருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற ஆதாரங்களை இலண்டனிலுள்ள சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது....
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளன. அவரது உடலத்தைக் உறவினர்களிடம் கையளிப்பதில் சிக்கல்கள் எழலாம் என சிக்கல்கள் எழுந்திருந்தன. எனினும் நேற்றைய தினமே தமிழினியின் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவரது சொந்த இடமான கிளிநொச்சி - பரந்தனுக்குக் கொண்டுவரப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது...
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி டி காக்கின் சதத்தால் (103) 7 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்....
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டது. இதற்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு...
இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம், ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமார். இந்த இருவரும்...
கடந்த 2009 ற்கு முன்னரான காலத்தில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின்போது காயமடைந்து முள்ளந்தண்டு பாதிப்பிற்கு உள்ளாகி இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்த நிலையில் வாழும் இளைஞர் ஒருவருக்கு மூன்று லட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள தமிழ்ச்சோலைப் பள்ளி நிர்வாகத்தினால் அனுப்பப்பட்ட நிதி தமிழ்த்...
இந்திய வீடமைப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தகவல் தொடர்பாடல் மற்றும் மனிதவள இராஜதந்திர...
கைதடி மற்றும் நாவற்குழி பகுதியில் ஏ 9 நெடுஞ்சாலையின் பெரிய அளவிலான வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் குழாய்களையும், இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாட முற்பட்ட 8 இராணுவத்தினரையும் சாவகச்சேரி நீதவான் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். எதிர்வரும் 29 ஆம் திகதி இவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்த்pல் ஆஜராக...
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழியை அவர் மீறினால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், விஷால் மீது எதிர் அணியினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷால் மீதான தாக்குதல் குறித்து நடிகை சங்கீதா கூறியதாவது, வாக்குசீட்டுகளை என் கையில் இருந்து சரத்குமார் அணியை சேர்ந்தவர்கள் புடுங்கி சென்றனர். 3 நபர்கள் சரத்குமார் பக்கத்திலேயே இருக்கிறார்கள் ஒருவர் கிச்சா ரமேஷ், சிசர்ஸ்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமி காலமானார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
எமது சமூகம் மனித விழுமியங்களை இழந்து எப்படியும் வாழலாம் என்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியிலான முதியோர் நலன்பேணும் அமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த புதன்கிழமை யாழ்.சென் ஜோன்ஸ் அன்புலன்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
