Ad Widget

இலங்கை விமானப்படைக்கு இந்தியாவின் போர் விமானங்கள்?

இலங்கைக்கு புதிய ரக போர் விமானங்களை வழங்க இந்தியாவும் முன்வந்துள்ளது. இலங்கை விமானப்படைத் தளபதி பாகிஸ்தான் செல்லவுள்ளார் என்றும் அவர் பாகிஸ்தானின் ஜேஎப்-17 சுப்பர்சொனிக் விமான கொள்வனவு தொடர்பில் பேச்சு நடத்துவார் என்றும் செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து இந்தியா, தமது விமானங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கையிடம் கேட்டுள்ளதாக விமானப்படை தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கை விமானப்படை உடனடியாக போர் விமானக் கொள்வனவில் ஈடுபடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை ஏற்கனவே தம்வசம் உள்ள இஸ்ரேலிய தயாரிப்புக்களான கிபிர் மற்றும் சீன தயாரிப்பான எப்-7 விமானங்களுக்கு பதிலாக புதிய விமானங்களை கொள்வனவு செய்ய முயன்று வருகிறது.

இந்தநிலையில் சிறந்த தயாரிப்புக்களை கொள்வனவு செய்யவே தாம் முயற்சிப்பதாக இலங்கையின் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts