அத்துமீறிய கடற்றொழில்கள் நிறுத்தப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறியும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியும் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடன் தடைசெய்ய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் அவதானத்திற்குக் கொண்டுவந்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த கால யுத்தம் காரணமாக...

பிரான்ஸ் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டியது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீஸாரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீது அபாவுத்(28) என்று அண்மையில் தெரியவந்தது. மொராக்கோ...
Ad Widget

சீருடை வழங்க வவுச்சர் முறை ஏன்? கல்வி அமைச்சரின் விளக்கம்

சீருடைகளை பெற்றுக் கொள்ள மாணவர்களுக்கு வவுச்சர் வழங்க தீர்மானித்தமையானது, தரமற்ற துணிகளை அவர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும் இடைத்தரகர்களுக்கு கமிஷன் செல்வதைத் தவிர்க்கவும் 500 மில்லியன் ரூபாய் வரை சேமித்து அவற்றை கல்வி வளர்ச்சிக்கு செலவிடவுமே என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் 42 இலட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சீருடை வழங்க...

காணாமல் போனோரின் உறவுகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்

காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இன்னும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் பத்துநாள் விஜயம் மேற்கொண்ட காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழு, நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். தமது விஜயத்தின் போது மேற்கொண்ட கலந்துரையாடல்களில்...

விபத்துக்களால் மாண்ட உயிர் ஊர்வலங்களால் மீண்டு வராது – முதலமைச்சர்

கடந்த கால போரினால் வீதிகள் குன்றும் குழியுமாக காணப்பட்டமையினால் வாகனங்களை மெதுவாக செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்போது போர் மேகங்கள் களைந்து சென்று அமைதிச் சூழல் ஏற்பட்டதால் வீதிகள் திருத்தப்பட்டு காப்பெற் வீதிகளாக்கப்பட்டு அளவுக்கதிகமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகின்றது என வடக்கு முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இன்று வீதி பாதுகாப்பு...

750 குற்ற சம்பவங்களுடன் ராஜபக்ஷ குடும்பத்துக்கு தொடர்பு

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான 725 சம்பவங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பானமுறைப்பாடுகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

ஜேம்ஸ்பாண்ட் படங்களிலேயே மிக மோசம் ஸ்பெக்டர்! : முத்தக்காட்சிகளுக்கு இந்தியாவில் தடை

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜேம்ஸ்பாண்ட் வரிசைப் படங்கள் வருவது வழக்கம். அப்படி அந்தப் படங்கள் வெளியாகும்போது, கிட்டத்தட்ட திருவிழா மாதிரி ஒரு தோற்றம் இருக்கும். குறிப்பாக பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த நான்கு படங்கள் வெளியான போதும் அந்த எபெக்டைப் பார்க்க முடிந்தது. பிறகு டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த...

தேங்கி நின்ற வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்த இளைஞர்கள்

யாழ்ப்பாணம் சுதுமலை ஜே-129 கிராம சேவகர் பிரிவில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வழிந்தோட முடியாத நிலையிலிருந்த நீரோடும் வாய்க்கால் ”நமக்காக நாம்” அமைப்பினரின் முயற்சியால் நேற்றுப் புதன்கிழமை (18-11-2015) காலை சீரமைக்கப்பட்டது. நீரோடும் வாய்க்காலில் இடப்பட்ட குப்பைகள், கழிவுகள் காரணமாகவும் பற்றைகள் சூழ்ந்திருந்தமையாலும் நீரோட்டம் தடைப்பட்டிருந்த சேர்.கொத்தலாவல திட்ட வாய்க்கால்...

சர்ச்சைக்குரிய வவுனியா அரசாங்க அதிபர் இடமாற்றம்

வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றிய பந்துல ஹரிச்சநத்திர இன்று முதல் இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் சுமார் 4 வருடங்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய பந்துல ஹரிச்சந்திர வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகைள கருத்தில் கொள்வதில்லை என வட மாகாணசபையில் அவரை இடமாற்றம்...

தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கி பலி

திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவ்லக்கடவெல கிராமத்தில் மின்னல் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 50 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வயலில் இப்பெண் வேலை செய்துவிட்டு கணவருக்கு தொலைபேசியூடாக அழைப்பை மேற்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்துக்குள்ளானார். இந்நிலையில், இவரை கோமரங்கடவெல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில்...

எல்லை தாண்டியதாக கூறப்படும் 14 தமிழக மீனவர்கள் கைது

பாக்கு நீரினை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இராமேசுவரத்தில் இருந்து 600 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பாக் நீரினை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். மேலும் 14...

சாலமன் தீவில் நிலநடுக்கம்

வடக்கு பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. ஏப்ரல் 2007 -ல் 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால், சுனாமி ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். பசிபிக் கடலிலல் உள்ள சாலமன் தீவில் அடிக்கடி நிலநடுக்கம்...

பரணகம ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க 2538 பேர் யாழ்ப்பாணத்தில் விண்ணப்பம்!

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் சாட்சியமளிக்க இதுவரை 2 ஆயிரத்து 538 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விசாரணை அடுத்த மாதம் 11 தொடக்கம் 16 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெறவுள்ளன. எனினும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்க இன்னும் பலர் முன்வருவர் என யாழ். அரச...

யாழ்ப்பாணத்தில் சந்திப்புகள், நிகழ்வுகளில் பங்கேற்கிறார் சமந்தா பவர்!

இலங்கை வரவுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், இந்தியா மற்றும் இலங்கைக்கான பயணத்தை...

விக்னேஸ்வரன் அறிக்கைக்கு சுமந்திரன் பதில்!

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- நேற்றைய தினம் வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்த அறிக்கையில் பொதுத்தேர்தல் நேரத்தின் போது கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு தன்னுடைய நீண்ட...

உள்ளக முரண்பாடுகளை ஊடகங்களில் பேச வேண்டாம்! – விக்கி, சுமந்திரனிடம் மாவை கோரிக்கை

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கருத்து முரண்பாடுகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதை கைவிட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் அவற்றை நியாயப்படுத்தியும் உள்நாட்டு மற்றும்...

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் அகிலதாஸ் இராஜினாமா

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, வற்புறுத்தியதின் அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக அவர் கூறினார். வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதையடுத்து, அவரது...

கடற்படையின் இரகசிய முகாமை சுவரிலிருந்த வரிகள் காட்டிக் கொடுத்தன

திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கு கடற்படையின் இரகசியத் தடுப்பு முகாம் என்று சொல்லப்பட்ட நிலையத்துக்கும் சென்றோம். அங்கிருந்த சுவர்களில் எழுதப்பட்டிருப்பதை வைத்து பார்க்கின்ற போது, அங்கு பல பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள்...

உரவகைகளின் நிர்ணய விலை அதிகரிக்கப்படின் அறியத்தரவும்!

யாழ் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் நெற்செய்கைக்கான உரங்களை (யூரியா, சுப்பர் பொசுபரசு (TSP), மியூரேற் பொட்டாசு (MOP), விவசாயிகள் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்யும் நிலை ஏற்படின் அது தொடர்பான முறைப்பாட்டினை மாவட்ட செயலகத்திற்கு அறியத்தருமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...

இரு முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

வில்பத்து தேசிய சரணாலயத்தில் இராணுவ அதிகாரிகள் குழுவொன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. நேற்று குறித்த வழக்கு அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்...
Loading posts...

All posts loaded

No more posts