Ad Widget

இரு முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

வில்பத்து தேசிய சரணாலயத்தில் இராணுவ அதிகாரிகள் குழுவொன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

நேற்று குறித்த வழக்கு அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, சந்தேகநபர்களை ஜனவரி மாதம் 19ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 19,20 மற்றும் 21ம் திகதிகளில் குறித்த வழக்கை தொடர்ந்தும் விசாரணை செய்ய நீதிபதி இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

Related Posts