- Saturday
- May 16th, 2026
"இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த 10 மாதங்களுக்குள் புதிய அரசு மேற்கொண்ட அர்ப்பணிப்பு தெளிவானது." - இவ்வாறு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் திருமதி சமந்தா பவர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோது கூறினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...
சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறைகளையும் பலப்படுத்த இம்முறை வரவுசெலவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் சமூக நலன்புரியை இவ்வரவுசெலவில் மறக்கப்படவில்லையெனவும் போக்குவரத்துதுறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். வரவுசெலவின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இவ்வரவுசெலவு தொடர்பில் நாம் ஆராய வேண்டும். அதில்...
நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு எதிர்பார்ப்புடன் கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தொழிலுக்கேற்ப தொழிற் கல்வி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (23) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த...
சிரியா மற்றும் இராக்கில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளிக்கு எதிரான வான் தாக்குதல்களை அதிகரிக்கப்போவதாக பிரான்ஸின் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந்த் தெரிவித்துள்ளார். பாரிஸில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரனுடன் பேச்சு நடத்தியபிறகு பேசிய ஒல்லாந்த், ஐஎஸ் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், பிரெஞ்ச் விமான தாங்கிக் கப்பலான ஷார்ல் த கோலும் கலந்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். சிரியாவில்...
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் என அமெரிக்க உயரதிகாரி சமந்தா பவர் உறுதியளித்தார் என சம்பந்தன் தெரிவித்தார். ஐ நாவுக்கான அமெரிக்காவின் நிரந்திரப் பிரதிநிதி சமந்தா பவர், இலங்கை வந்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்தரப்பினரை சந்தித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமந்தா பவரை சந்தித்து பேசினர். அச்சந்திப்பில் போருக்கு பின்னரான...
ரஜினியின் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘எந்திரன்’. இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம், வசூலிலும் பிரம்மாண்டம் படைத்தது. இதுவரை எந்த படங்களும் செய்யாத வசூல் சாதனை படைத்த, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிர ஆர்வம் காட்டினார். இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினியும் பச்சைக் கொடி காட்டினார்....
கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்தியா, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. நடுக்கடலில் வைத்து இந்திய மீனவர்களை கற்களால் அடித்து இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள், இராமேஸ்வரம் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (22) விஜயம்மேற்கொண்டதுடன் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டார். பாடசாலையின் அதிபர் திருமதி வசந்தாதேவி மேகலிங்கம் ஓய்வுபெறுவதையொட்டி, அவரை கௌரவிக்கும் வகையில் பாடசாலை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து கௌரவிப்பு விழாவை நடத்தியிருந்தனர். இந்நிகழ்வுக்கு எதிர்பாராதவிதமாக மஹிந்த தேசப்பிரிய வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலந்துகொண்ட...
நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக 5000 ரூபாய் அறவிடப்படும் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கோ அல்லது இரு சக்கர வாகனங்களுக்கோ இந்தக் கட்டணம் அறவிடப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கருத்து...
பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இரசாயனங்களை கலந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள Necker Paediatric மருத்துவமனையில், தொற்றுநோய் பாதுகாப்பு உறைகள், பாலித்தீன் பூட்ஸ், கையுறைகள் மற்றும் நுண்ணுயிரிகளிலிலுந்து காக்கும் முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுவிட்டதால், ஐ.எஸ் தீவிரவாதிகள்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சுந்தேகநபர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் 9 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை படுத்தியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் பெறப்பட்ட தடயப் பொருட்களின் ஆய்வு அறிக்கை...
புலி’ படத்திற்கு விஜய் தனது 59-வது படமாக அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்படிப்பு சமீபத்தில் சென்னையில் கொட்டிய அடை மழையிலும் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் கிடைத்த நேரத்தில், தனது படக்குழுவினருடன் இணைந்து...
பருத்தித்துறை, மணற்காடு பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அரச தொல்பொருள் திணைக்களத்துக்குரிய இடத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகையான நகைகள் மற்றும் பணம் என்பவற்றைத் தோண்ட முற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நால்வரையும் 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, ஞாயிற்றுக்கிழமை (22) அனுமதி...
தமிழ்நாட்டில் உள்ள அகதிகளில் இலங்கை தமிழ் அகதிகள் 42 பேர், நாளை 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைஇலங்கையை வந்தடையவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய (UNHCR) வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புடன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அமெரிக்க மக்களும் உதவ காத்திருக்கின்றார்கள், எனவே, இந்த நாட்டில் நீதியையும், ஜனநாயகத்தினையும் நிலைநாட்ட மாணவர்கள் ஒன்றுபட வேண்டுமென அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவர், யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் அமெரிக்க அரசாங்கத்தின் நிதி...
சமையல் எரிவாயுவின் விலை இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 1346 ரூபாவாக குறைவடைந்துள்ளது. மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 572 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 273 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி...
வடக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் சில பகுதிகள், வட இந்தியாவில் தில்லி உள்ளிட்ட இடங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று அதிலை 2.16 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி இருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் அச்சத்தில் வெளியே ஓடிவந்துள்ளனர்....
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பார்க் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்லியன்ஸ் பார்க் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானதாகவும், மேலும் 16-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், காயமடைந்தவர்கள் அருகில்...
தமிழுக்காகவும், தமிழ் உணர்வுக்காகவும் மீண்டும் சினிமாவில் நடிக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது இளைய மகன் சண்முகபாண்டியனுடன் இணைந்து "தமிழன் என்று சொல்' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், விஜயகாந்த் பேசியது: அரசியல் பிரவேசத்துக்குப்...
அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வந்த ‘கககபோ’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கேசவன். இவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் மலேசியாவில் பெற்றோருடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, தவறி விழுந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட அவரை மலேசியா காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
