Ad Widget

தேர்தல் ஆணையாளர் தென்மராட்சிக்கு விஜயம்

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (22) விஜயம்மேற்கொண்டதுடன் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டார்.

பாடசாலையின் அதிபர் திருமதி வசந்தாதேவி மேகலிங்கம் ஓய்வுபெறுவதையொட்டி, அவரை கௌரவிக்கும் வகையில் பாடசாலை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து கௌரவிப்பு விழாவை நடத்தியிருந்தனர்.

இந்நிகழ்வுக்கு எதிர்பாராதவிதமாக மஹிந்த தேசப்பிரிய வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலந்துகொண்ட அவர், நூல் ஒன்றை வெளியிட்டு வைத்ததுடன், வித்தியாலய வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.

Related Posts