மருதநாயகத்திற்காக ஆளவந்தான் கெட்டப்புக்கு மாறிய கமல்!

தூங்காவனம் படம் ரிலீசுக்கு முன்பே கமல் ஹாஸன் தனது கெட்டப்பை மாற்றிவிட்டார். விருமாண்டியில் வந்தது போல பெரிய முறுக்கு மீசையுடன்தான் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது அந்த கெட்டப்பை மாற்றி, ஆளவந்தானில் வந்தது போல மீசையின்றி, குறைந்த தலைமுடியுடன் காட்சி தருகிறார். இந்த கெட்டப் எதற்காக என்று அவர் வெளியில் கூறவில்லை. தூங்காவனம் வெளியாகும்...

இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள்!- எஸ்.ஏ.சந்திரசேகரன்

இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் 'நையப்புடை'. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்...
Ad Widget

இளம் நடிகருக்காக ஒன்று சேரும் ரகுமான், முருகதாஸ்!

இந்தியா சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அதேபோல் தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று வெற்றி கொடி நாட்டியவர் முருகதாஸ்.இவர்கள் இருவரும் அதர்வாவிற்காக ஒன்று சேரவுள்ளனர், நீங்கள் நினைப்பது போல் படத்தில் இல்லை. முருகதாஸின் உதவி இயக்குனர் இயக்கிய கணிதன் படத்தின் இசை வெளியீட்டி விழாவிற்காக தான். இதில் ரகுமான் பாடல்களை வெளியிட் முருகதாஸ்...

இந்தியா த்ரில் வெற்றி

இந்தியா - அவுஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா அவுஸ்திரேலியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது. இந்திய இளம் வீரர் பும்ரா தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட்டார். முந்தைய போட்டிகளைப் போலவே அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து அதிரடி ஆட்டத்த வெளிப்படுத்தியது....

நேதாஜி உடல் எரியூட்டப்பட்ட தகவல் ஆதாரங்களுடன் வெளியானதால் சர்ச்சை

சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சர்ச்சைக்குரிய மரணம் குறித்த, புதிய தகவல்களை வெளியிட்டு வரும், பிரித்தானிய இணையதளம், அவரது உடல் எரியூட்டப்பட்டதை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மரணம் தொடர்பான விஷயத்தில்,...

யாழில் கைதிக்கு பாணுக்குள் கஞ்சா வைத்து கொடுக்க முற்பட்டவர் சிக்கினார்

யாழ். சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதி ஒருவருக்கு பாணுக்குள் கஞ்சா வைத்து கொடுக்க முற்பட்ட நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மானிப்பாய் - பூங்காவடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேகநபர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் எனவும், 30 கிராம் கஞ்சாவினை ஒரு இறாத்தல் பாணுக்குள் வைத்து சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளார் எனவும்...

இலங்கை கண்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சி

19வது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட சில விடயங்களில் இலங்கை அண்மைக் காலங்களில் கண்டுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல் செய்தல் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பிரதிநிதிகள் குழு, ஐரோப்பிய சங்கத்தின் நிர்வாகிகள், மனித உரிமைகள் தொடர்பிலான செயற்குழு உள்ளிட்டோருக்கு இடையிலான...

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு

கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலய வருடாந்த திருவிழா வரும் பெப்ரவரி மாதம் 20-ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தற்போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகி விட்டதால் கடந்த ஆண்டு நடைபெற்ற அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இலங்கை தூதரகத்தின் அனுமதி பெற்று தமிழகத்தை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழாவில்...

2500 கொடுப்பனவு ஜனவரி மாத சம்பளத்துடன் சேர்க்கப்படவில்லை

ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதாக கூறிய 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு, இதுவரை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கப்படாத 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு பெப்ரவரி மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என...

முதல்வருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த இளைஞனுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் எனக்கோரி தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய இளைஞனுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்.வரணி பகுதியை சேர்ந்த நா.துஷாந்த் என்ற இளைஞன் முதலமைச்சர் மீது அவதூறு பேசாதீர்கள், முதலமைச்சரை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் என்ற 4 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று காலை...

பெண் மீது கல்வீச்சுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில்லறைப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்திவரும் இளம்பெண் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வெள்ளிக்கிழமை (22) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதில் பெண் தலையில் படுகாயமடைந்தார். வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் மேற்படி பெண் வியாபாரம் செய்தபோது, பெண்ணை வெளியில் செல்லுமாறு கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரட்டினர். வெளியில் சென்ற...

ஜனாதிபதியின் வாகனம் விபத்து

பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவத்தினால் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்புக்களுடம் ஏற்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் ஆணைக்கேற்ப செயற்பட தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் மக்கள் ஆணையினைக் கேட்டுப் போட்டியிட்டிருந்தது. மிகப் பெரும்பான்மை வாக்குகளை கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், புதிய அரமைப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் மக்கள் ஆணைக்கேற்ப செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

வைரமுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசினார்!

முல்லைத்தீவில் நடக்கும் உழவர் விழாவில் பங்கேற்க வந்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் வைரமுத்துவை சந்தித்துப் பேசினார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அழைப்பின்பேரில்கவிப்பேரரசு வைரமுத்து இலங்கை வந்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த இவர் நேற்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்துப் பேசினார். இதன்போது வைரமுத்து...

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

இலங்கையுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடீஷ் கூறியுள்ளார். உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்படுத்தப்படவுள்ள ஒப்பந்தத்தினூடாக, இலங்கையின் அபிவிருத்திக்காக புதிய சந்ததியினருக்கு தொழில்நுட்பத்தை...

2016ம் ஆண்டில் நடைபெறவுள்ள பரீட்சைகளின் திகதிகள்

2016ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறவுள்ள தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி...

தெறி டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கடந்த பொங்கல் தினத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் புகைப்படங்கள் மட்டுமே வெளியானது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை அறிவித்திருக்கின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு...

பிரேமம் படத்தை பாராட்டிய சங்கர்

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் மே 29-ம் தேதி வெளியான மலையாள படம் பிரேமம். இப்படம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியானது. காதல் கதையம்சம் கொண்ட இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. மலையாள மொழியிலேயே இப்படம் தமிழ்நாட்டில் வெளியானது. இங்கேயும் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களை இப்படம்...

வெறி கொண்ட விசர் நாய்; 11 பேர் வைத்தியசாலையில்

சாவகச்சேரி சிவன் கோவில் பிரதேசத்தில் வசித்த 11 பேரை கடித்த விசர் நாய், இன்று வெள்ளிக்கிழமை இறந்துவிட்டது. இந்த விசர் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 11 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், நேற்று வியாழக்கிழமை (22) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேரையும் கடித்த நாய், இன்று வெள்ளிக்கிழமை (22) காலையில் இறந்துவிட்டதையடுத்து, அங்கு...

வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம், இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடலில், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் மேலும் பலர் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன், புதிய அரசியலமைப்பு, மக்களுக்கான தீர்வுத் திட்டம், காணாமல் போனோர் தொடர்பான...
Loading posts...

All posts loaded

No more posts