கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை நிர்மூலமாக்குகிறது தமிழரசுக் கட்சி! – சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை நிர்மூலமாக்கும் அடிப்படையில் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் செயற்பட்டு வருவது நாகரிகமான விடயம் அல்ல என ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாணசபை...

யோஷிதவுக்கு எதிராக மேலும் 5 குற்றச்சாட்டுக்கள்!

பண மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் இருக்கும் யோஷித உட்பட ஐவருக்கும் எதிராக மேலும் ஐந்து பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சி.எஸ்.என். தொலைக்காட்சி நிர்வாகம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே தற்போது யோஷித ராஜபக்‌ஷ கைதாகி உள்ளார். இவருக்கு எதிராக போலி ஆவணங்கள் தயாரித்தல், நம்பிக்கை மோசடி, பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம்...
Ad Widget

காணாமல் போனோரின் உறவுகளுக்கு மதிப்பளித்து வாகனத்தில் இருந்து இறங்கி வந்த அல் ஹுசைன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சயீத் ரா அத் அல் ஹுசைன் நேற்று யாழிற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலத்தில் சந்தித்து கலந்துரையாட சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தின் வாசலில் காணாமல் போனோரின் உறவினர்கள் காத்திருந்தார்கள். வாகனத்தில் வந்த ஆணையாளர் பாதுகாப்பாளர்களை...

வீழ்ந்தது இங்கிலாந்து – அரையிறுதியில் இலங்கை

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின், காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்தை ஆறு விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ள இலங்கை, அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. பங்களாதேஷின் மிர்பூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 184...

அடுத்த முறை உங்களை சொந்த இடத்தில் சந்திக்க வேண்டும் – இடம்பெயர்ந்த மக்களிடம் ஹூசைன்

நான் அடுத்த தடவை வரும் போது, உங்களை சொந்த இடத்தில் தான் சந்திக்க வேண்டுமென விரும்புகின்றேன், என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து...

கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது சரியென ஏற்றுக்கொள்ளப்படவில்லை!

தற்போதைய காலத்தில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது, சர்வதேச அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தால் அவ்வளவு சரியென ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், சிரியாவிலும் அவ்வாறான பொதுமன்னிப்பு கொடுப்பது தவறு என தான் எடுத்துக் கூறியதாவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்ததாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, இவ்வாறான...

யாழ். வராமலேயே புதுடெல்லி திரும்பினார் சுஷ்மா!

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று பிற்பகல் புதுடெல்லி திரும்பினார். நேற்று மாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து விசேட விமானத்தின் மூலம் அவர் புதுடில்லி நோக்கி பயணமானார். இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9வது மாநாட்டில் கலந்து கொள்வதாகற்காக நேற்று இலங்கைக்கு...

12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டை அறிமுகம்!

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு...

மைத்திரியின் அரசு மீது மோடி அதீத நம்பிக்கை! – ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்தார் சுஷ்மா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய அரசும் இலங்கையின் புதிய தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கீழான அரசின் மீது அதிகம் நம்பிக்கை வைத்துள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசு பூரண ஆதரவு வழங்கும் என்றும்...

தெற்காசிய போட்டிகளில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்

இந்தியாவில் நடைபெற்று வரும் 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை இலங்கை வென்றுள்ளது. ஆண்களுக்கான 200 மீற்றர் தூர நீச்சல் போட்டியில் (freestyle swimming)முதலாமிடத்தைப் பெற்ற மெத்தியுவ் அபேசிங்க இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். குறித்த தூரத்தை அவர் 1 நிமிடமும் 59.28 செக்கன்களில் கடந்துள்ளார். இதன் மூலம் மூலம் தெற்காசிய போட்டியில்...

கொலை வெறியுடன் இளைஞரை துரத்தித் துரத்தி வெட்டிய கும்பல்!

யாழ்ப்பாணம் கட்டைபிராய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாக்குதலில் புதிய செம்மணி வீதியை சேர்ந்த க.பீரதீபன் (வயது 27) என்பவரே படுகாயமடைந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில்...

தமிழரசுக் கட்சியில் இணைந்தார் சிவமோகன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.எல்.ஆர்.எப் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிவமோகன், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். அத்துடன், கட்சியில் இணைவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கடிதமொன்றை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்...

நேற்று வெளியான படத்தின் கதாநாயகி கொலை! :கைதான நடிகர் ரமேஷ்சங்கர் பரபரப்பு வாக்குமூலம்

‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்ற படம் நேற்று முதல் தமிழகமெங்கும் வெளியானது. இதில் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை கலந்து கொள்ளவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு நடிகை சசிரேகா, வெளிநாடு சென்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். மேலும் படக்குழுவினரின் பட்டியலில் கூட நடிகையின் பெயரை குறிப்பிடாமல்...

சினிமா பிரபலங்கள் லக் என்ற பெயரில் கடைப்பிடிக்கும் பழக்கங்கள்!!

எல்லாருக்கும் எதாவது ஒன்றை ராசியாக கருதும் எண்ணமிருக்கும். தன்னம்பிக்கை மிகுதியாக இருப்பவர்கள் கூட அவர்களது முக்கியமான செயல்களில் ஈடுபடும் போது எதாவது ஒரு விஷயத்தை ராசி என கருதி அதை தவறாமல் செய்வார்கள். மாணவர்கள் ஒரே பேனாவை தேர்வுக்கு எடுத்து செல்வதில் தொடங்கி, ராசியான நாள், கிழமையில் முக்கியமான செயல்களை செய்வது வரை இது தொடர்கிறது....

தெறி டீசரை நீக்கி அதிர்ச்சி தந்த youtube! : ஆபாசமாக திட்டிய விஜய் ரசிகர்கள்!!

காப்புரிமை பிரச்சினை காரணமாக விஜய்யின் தெறி டீசரை, வெளியான 12 மணி நேரத்துக்குள் நீக்கி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது யு ட்யூப். அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய 50-வது படம்....

பிரிமியர் லீக் வீரர்கள் ஏலம் துவங்கியது

இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் துவங்கியது . பெங்களூருவில் நடக்கும் ஏலத்தில் 351 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் . தற்போதைய நிலவரப்படி அதிகபட்சமாக ஆஸி., வீரர் ஷேன் வாட்சனை - ரூ. 9.50 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.மேலும் ஏலம் போன வீரர்கள் விவரம் வருமாறு: இங்கிலாந்தை சேர்ந்த கெவின் பீட்டர்சனை...

வந்தடைந்தார் செயிட் அல் ஹூசைன்

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். டுபாயிலிருந்து வந்த ஈகே650 என்ற விமானத்தில் வந்த செய்ட் அல் ஹூசைனுடன் 6 பிரதிநிதிகளும் வருகை தந்தனர். நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள செயிட் அல்...

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு கடும் நடவடிக்கை! – அரசாங்க அதிபர்

யாழ்.குடாநாட்டில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பேருந்து சாரதிகள் மிக மோசமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் நிலையில் அதிகளவான விபத்துக்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை...

விசாரணை படத்தை பாராட்டிய ரஜினி

அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி, கிஷோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் விசாரணை. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். தனுஷும், வெற்றிமாறனும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகவுள்ளது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளிடையே வெளிவரும் விசாரணை வெளிவருவதற்கு முன்பே, திரையுலக பிரபலங்கள் பலருக்கும் இப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர்....
Loading posts...

All posts loaded

No more posts