Ad Widget

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் அடித்து துரத்தப்படுவார்கள் – சுரேஸ்

தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று இன்று பொய்யான வேடதாரிகளாக செயற்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் வடகிழக்கிலிருந்து அடித்து துரத்தப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை...

பாடசாலை நேரம் ஒரு மணிநேரத்தால் அதிகரிப்பு!!

ஏப்ரல் 18, 2022 முதல் பாடசாலை நேரம் ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் முதலாம் பாடசாலை தவணை தொடக்கம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை நேரங்களை நிறைவு செய்வதற்கு இந்த...
Ad Widget

எரிபொருள் வரிசையில் பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்த நபர்!

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தில் இருந்து கீழே இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த போது பேருந்தின் சில்லு ஏறியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு (05) 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் (வயது 37) என்பவரே உயிரிழந்தார். “உயிரிழந்தவர் வயாவிளான்...

எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மின்வெட்டு நடைமுறையில் மாற்றம்

நிலவும் மின் நெருக்கடி காரணமாக, கொழும்பு முன்னுரிமைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நேற்று (05) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தினமும் 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, A முதல் F வரையிலான வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4...

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள ரணில் யோசனை!

நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொறிமுறையொன்றை நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு பலதரப்பு முகவர் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி சாத்தியமானது என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், இது தனது அரசியல் வாழ்வில் இதுவரை...

அனைவரும் இணைந்து மக்களின் கோபத்தை தணிக்க முதலில் செயற்பட வேண்டும் – நாமல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்தால், நாட்டின் அடுத்த திட்டம் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகத்தின் கோட்பாடுகளை மீறி அரசாங்கங்களை மாற்ற முடியாது என அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். “இன்று கோட்டா வீட்டுக்குப் போ என்று சொல்வீர்கள். ஆனால் நாளை அவர் பதவி விலகினால் என்ன...

அவசரகாலச் சட்டம் மீளப் பெறப்பட்டது!

இலங்கையில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையை அடுத்து, மக்கள் போராட்டங்களை அடுத்து அதி விசேட வர்தமானிமூலம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் 05.04.22 நள்ளிரவு முதல் மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரசுரித்துள்ளார்.

நேற்று நிதி அமைச்சராக நியமனம் பெற்ற அலி சப்ரி இன்று பதவி விலகினார்!!

நேற்று நிதி அமைச்சராக நியமனம் பெற்ற அலி சப்ரி இன்று பதவியை இராஜிநாமா செய்தார். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்யத் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

மக்களுடன் மக்களாக வீதிக்கு இறங்கினார் கொழும்பு பேராயர்!

பொதுமக்கள் நடத்திவரும் அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கமே காரணம் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையுடன் பல அருட்தந்தைகளும், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளும் இணைந்து மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். இன்று...

வரலாற்றில் முதன்முறையாக டொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது!

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

பல்கலைக் கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நேற்று காலை இடம்பெற்ற பீடாதிபதிகள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர் நலன்கருதி உடனடியாக...

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு!

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கை கோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

113 எம்.பிக்களுடன் வந்தால் அரசாங்கத்தினை கையளிக்க தயார்!! – ஜனாதிபதி

113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்வெட்டு!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறரை மணிநேர மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி A முதல் L வரையான வலயங்களில் முற்பகல் 8 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையில் சுழற்சி...

ஐக்கிய மக்கள் சக்தியினரின் யாழ் போராட்டத்தில் குழப்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை...

யாழ்ப்பாணத்திலும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

வடக்கில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி யாழ். நகரில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் ஏழு நாட்களுக்குள் அநுராதபுரம் கடந்து தெற்கு வரை செல்லவுள்ளது. கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மற்றும் மிரிஹான பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போராட்டம் என்பவற்றின் எதிரொலியாக...

தற்போதைய பிரச்சினைக்கு எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை – அங்கஜன்

தற்போதைய பிரச்சினைக்கு எந்த அரசிடமும் எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை. தற்போதுள்ள சிக்கலுக்குள் தீர்வு பெற வேண்டுமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வன்முறை இல்லாமல் போராட்டங்களை மேற்கொண்டே தீர்வை பெறலாம் எனவும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின்...

இன்றும் சில இடங்களில் பதற்றமான நிலைமை!!

இலங்கையில் இன்றும் பல இடங்களிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் , சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று காணப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்ற மரவேலை செய்பவா்கள் மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்துள்ளதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளனது. அத்துடன் புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும்...

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூடையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வின் மூலம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ.2350 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2021 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!! 2022 உயர்தரப் பரீட்சை ஓகஸட்டில்!!

இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலேயே நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடமொன்றை இவ்வருடம் திறக்க அரசு தீர்மானித்துள்ளது என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன...
Loading posts...

All posts loaded

No more posts