Ad Widget

இன்றும் சில இடங்களில் பதற்றமான நிலைமை!!

இலங்கையில் இன்றும் பல இடங்களிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் , சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று காணப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது.

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்ற மரவேலை செய்பவா்கள் மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்துள்ளதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளனது.

அத்துடன் புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனால், அவ்வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடும்பநல சுகாதார ஊழியர்கள், மருதானை டீன்ஸ் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால், கொழும்பு நகர சபை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Related Posts